சினி அப்டேட்ஸ்

’வேண்டுமென்றே ஒரு நாள் சிறை’.. அல்லு அர்ஜூன் பகீர் குற்றச்சாட்டு!

ஜாமீன் நகல் நேற்றிரவே கிடைத்தும், இரவு முழுவதும் சிறையில் வைக்கப்பட்டு அல்லு அர்ஜுன் விடுதலை செய்யப்பட்டு இருப்பது சட்டவிரோதமானது என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்: கடந்த டிசம்பர் 5ஆம் தேதி பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இந்த நிலையில், இந்தப் படத்தின் ப்ரீமியம் ஷோ சந்தியா என்ற தியேட்டரில் திரையிடப்பட்டது.

இந்தப் படத்தை காண ரசிகர்களுள் ஒருவரான ரேவதி, அவரது கணவர் பாஸ்கர் மற்றும் இரு மகன்களுடன் வந்திருந்தார். அப்போது திடீரென அல்லு அர்ஜுன் அந்த தியேட்டருக்கு சர்பிரைஸ் விசிட் அடித்தார். இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள் அவரைக் காண முண்டியடித்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.

இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் ரேவதியும், அவரது மகனும் சிக்கி மயங்கி உள்ளனர். பின்னர், அங்கிருந்த போலீசார் அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் ரேவதி உயிரிழந்தார். அதேநேரம், அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரசிகையின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த அல்லு அர்ஜுன், அந்த குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிப்பதாகவும் அறிவித்து இருந்தார். இதனிடையே, அல்லு அர்ஜுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது இந்த நிலையில், நேற்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: திரை விமர்சனம்:ரசிகர்களை கொண்டாட வைத்ததா..சூது கவ்வும் 2..!

இது தெலுங்கு சினி உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, அல்லு அர்ஜுனுக்கு நேற்று இரவு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை அவர் செஞ்சல்குடா சிறையில் இருந்து வெளியே வந்தார்.

மேலும் “செஞ்சல்குடா சிறை நிர்வாகத்திற்கு நேற்று இரவே தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் ஜாமீன் நகல் கிடைத்துவிட்டது. இருப்பினும், அல்லு அர்ஜுனை சிறையில் இருந்து விடுவிக்கவில்லை. இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லி ஆக வேண்டும்.

ஏனென்றால், ஜாமீன் கிடைத்தும் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது சட்டவிரோதமானது. இதற்காக சிறை நிர்வாகத்தின் மீது தகுந்த ச்ட்ட நடிவடிக்கை எடுக்கப்படும்” என அல்லு அர்ஜுனின் வழக்கறிஞர் அசோக் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

3 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

3 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

3 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

4 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

4 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

4 hours ago

This website uses cookies.