சினி அப்டேட்ஸ்

கடற்கரை காவல் நிலையத்தில் இசைவாணி.. 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தன்னைப் பற்றியும், தனது சாதியைப் பற்றியும் அவதூறாகப் பேசுவதாக பாடகி இசைவாணி அளித்த புகாரில் சென்னை வடக்கு கடற்கரை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை: சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்த பிரபல கானா பாடகி இசைவாணி, சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னைப் பற்றியும், தான் சார்ந்த சாதியைப் பற்றியும் அவதூறாக சிலர் பேசுவதாக குறிப்பிட்டு உள்ளார். இதன் பேரில், சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

இசைவாணி விவகாரம்: கடந்த 2019 ஆண்டு, இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மயிலாப்பூரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், ‘ஐ அம் சாரி ஐயப்பா’ (I am sorry Ayyappa) என்ற பாடலை பாடி இருந்தார். தொடர்ந்து, இந்தப் பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடியும் வந்தார்.

இந்த நிலையில், இந்தப் பாடல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. இதனால் இசைவாணியைச் சுற்றி சர்ச்சையும், விமர்சனங்களும் அதிகரித்தன. குறிப்பாக, இந்து மத நம்பிக்கையைப் புண்படுத்தும் வகையிலு, ஐயப்பன் கோயில் மரபை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாகவும், இந்து மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இதனையடுத்து, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இசைவாணி புகார் ஒன்றையும் அளித்திருந்தார். அதில், கானா பாடல்களும், சமூக விழிப்புணர்வு பாடல்களும் தான் பாடி வருவதாக குறிப்பிட்டுள்ள இசைவாணி, கடந்த 2019ஆம் ஆண்டு ‘I am sorry ayyappa’ பாடல்களை பாடியதாகவும், சமூக வலைத்தளங்களில் அந்தப் பாடல் பரவி வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு எண்களிலிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறியிருந்தார்.

இதையும் படிங்க: மாமியார் கண்முன்னே மருமகள் செய்த காரியம்.. கள்ளக்காதலன் போலீசில் சரணடைந்ததன் பின்னணி என்ன?

மேலும், தன்னுடைய புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைத்தளங்களில் சமூக விரோதிகள் பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதேநேரம், பாடல் வெளியாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வேண்டுமென்றே சமூகத்தில் பதட்டம் ஏற்படுத்தவும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தவும் திட்டமிட்டு சிலர் செயல்பட்டு வருவதாக புகாரில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

40 minutes ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

41 minutes ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

1 hour ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

2 hours ago

விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!

2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…

4 hours ago

வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!

சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…

4 hours ago

This website uses cookies.