சினிமா துறையை பொருத்தவரை நடிகைகள் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு வருவது காலம் காலமாக நடந்து வருவதுதான். ஆனால், சமீபகாலமாக தான் அது பொதுவெளியில் தெரிய ஆரம்பித்து அந்த பிரச்சனை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக நடிகர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இப்படி பல பேருடன் அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர் அனுபவித்த பல நடிகைகள் பொதுவெளியில் வந்து அதைப்பற்றி கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் மலையாள சினிமாவில் கடந்து சில நாட்களாக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருப்பது ஹேமா கமிட்டி. இதனால் தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த மிக மோசமான அனுபவங்களை தைரியமாக பொதுவெளியில் வந்து அந்த நபரின் பெயரோடு சுட்டிக்காட்டி வருகிறார்கள் .
இதையும் படியுங்கள்: விஜய்க்கு ரூ. 200 கோடி… வெங்கட் பிரபுவுக்கு இவ்வளவு தானா? “கோட்” சம்பளத்தை கேட்டு ரசிகர்கள் பரிதாபம் !
அந்த வகையில் தற்போது பிரபலமான மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருவர் நடிகைக்கு நேர்ந்த மிக கொடுமையான அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் பற்றி கூறியிருக்கிறார். ஆம் மேக்கப் ஆர்டிஸ்ட் மற்றும் மசாஜ் தெரபிஸ்ட் ஆன இனியன் முருகானந்தம் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அவர் கூறியதாவது… சினிமாவில் மட்டும் இல்ல…. எல்லா துறையிலுமே இந்த அட்ஜஸ்ட்மெண்ட் விஷயம் இருக்குது. ஆனால், சினிமாவில தான் அதிகம். ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா இங்க தான் கோடி கணக்கான பணம் புரளுது. சினிமா ஆசையோடு வரும் ஒரு இளம் பெண் நடிகர்களுடன் கட்டிப்பிடித்து நடிக்க ரெடி ஆகும்போது அந்த வாய்ப்பைப் பெற வேண்டும் அப்படின்னா அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுறாங்க .
அப்படி செஞ்சாதான் அவங்க ஹீரோயின் ஆக முடியும் அதிக சம்பளம் வாங்க முடியும் அப்படின்னு பெண்களும் வேற வழி இல்லாம பணத்துக்காக போயிடறாங்க. அப்படித்தான் டைட்டான வெயிட்டான நார்த் இந்தியன் நடிகை ஒருவரை கேரவனிலிருந்து இயக்குனர் கையில் காண்டாமை வைத்துக்கொண்டு படுக்கைக்கு அழைத்ததையும் என் கண்ணாலே பார்த்திருக்கிறேன் .
சினிமாவில் நடிக்க இப்படியெல்லாம் அவஸ்தை பட வேண்டி இருக்கு அப்படின்னு அந்த நடிகை வந்து புலம்பினார்கள். அதுமட்டுமில்லாமல் கேரனில் சென்று வெளியில் வந்ததும் ரொம்பவே ஹார்ஷா உடம்பில் காயங்கள் ஏற்படும் அளவிற்கு என்னை அந்த இயக்குனர் டார்ச்சர் செய்தார் என்று புலம்பி அழுதார்.
இப்படித்தான் நடிகைகளுக்கு பெரிய பட வாய்ப்புகளை பெற்றுத் தரும் மேனேஜர்கள் முதல் கோடியில் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் வரை நடிகைகளை அனுபவித்து தான் வருகிறார்கள் என மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இனியன் முருகானந்தம் கூறி பகீர் கிளப்பி இருக்கிறார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.