சினி அப்டேட்ஸ்

3 வது முறையாக எஸ்கேப் ஆன தனுஷ் – ஐஸ்வர்யா – விவாகரத்து வேண்டாம்னா சொல்லிட்டு போங்கைய்யா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள்.

தோலுக்கு மேல் மகன்கள் வளர்ந்து விட்ட நிலையில் தொடர்ந்து தனுஷ் வெற்றி திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவாகவும் டாப் அந்தஸ்திலும் இருந்து வருகிறார். இதனிடையே ஐஸ்வர்யா இயக்குனராக சில திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமா மக்களின் கவனத்தில் இருந்து வருகிறார்.

விஷயம் இப்படியாக இருந்து வந்த சமயத்தில் திடீரென இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விடப் போவதாக அறிவித்து பேரதிர்ச்சியை கொடுத்தனர் .கடந்த 2002 ஆம் ஆண்டு தான் இவர்கள் இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். ஆனால் நிரந்தர பிரிவு இல்லை இருவரும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என பேசப்பட்டு வந்தது.

ஆனால் இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 7ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் இருவருமே ஆஜராகவில்லை.

பின்னர் வழக்கு விசாரணை அக்டோபர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், அன்றும் இவர்கள் இருவரும் ஆசராகவில்லை. பின்னர் நவம்பர் 2ம் தேதி ஆன இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்கள் இருவரும் இந்த விசாரணையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் மூன்றாவது முறையாக ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.

அதையடுத்து இந்த வழக்கு நவம்பர் 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்ததோடு அடுத்த விசாரணைக்கு கட்டாயம் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுருக்கிறார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்கு இஷ்டம் இல்லை என்றால் இருவரும் சேர்ந்து வாழ வேண்டியது தானே… ஏன் இப்படி சட்டத்தையும் வழக்கறிஞர்களையும் காக்க வைக்கிறீர்கள்? என நெட்டிசன்ஸ் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் கேள்வி எழுப்பி விளாசியுள்ளனர்.

இவர்கள் இருவரும் தொடர்ந்து அடுத்தடுத்து விசாரணைக்கு ஆஜராகாததால் இருவரும் சேர்ந்து வாழ முடிவில் இருப்பது ஓரளவு உறுதி செய்து இருக்கிறது. எது எப்படியோ நல்ல செய்தி வந்தால் போதும் என தனுஷ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

Anitha

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

8 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

9 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

9 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

9 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

9 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

9 hours ago

This website uses cookies.