சினி அப்டேட்ஸ்

இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!

சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகவில்லை, இது இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் என இயக்குநர் பாலா கூறியுள்ளார்.

சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி நடித்துள்ள திரைப்படம் ‘வணங்கான்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வருகிற பொங்கல் தினத்தை ஒட்டி ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, பாலா 25 என்ற விழாவும், ஆடியோ விழாவும் ஒன்றாக அமைந்தது.

ஆனால், இப்படத்திற்கு முதலில் சூர்யா ஒப்பந்தமானார். இதனுடைய அதிகாரப்பூர்வ போஸ்டர்கள், BTS புகைப்படங்கள் என வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், திடீரென இப்படத்தில் தான் நடிக்கவில்லை என சூர்யா அறிவித்தார். இதற்கு பாலா மீது எதிர்ப்பு கருத்துகளை ரசிகர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ள இயக்குநர் பாலா, “அருண் விஜய்க்காக நான் கதையை மாற்றவில்லை. அதே கதை தான். அதேநேரம், இது சூர்யா விலகிய படம் அல்ல. நாங்கள் இருவருமே பேசி முடிவெடுத்து, மற்றொரு படம் செய்து கொள்ளலாம் எனத் தீர்மானித்தோம்.

சூர்யாவை வைத்து நிஜமான இடங்களில் என்னால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. சுற்றுலாத் தலமான இடத்தில் அவரை வைத்து படப்பிடிப்பு நடத்தும்போது கூட்டம் அதிகமாக கூடுகிறது. எனவே, சூர்யா விலகிவிட்டார் என்றெல்லாம் கிடையாது. இருவரும் பேசி எடுத்த முடிவு தான் அது. இப்போதும் அதே உறவு தான் எங்களுக்குள் நீடிக்கிறது.

இதையும் படிங்க: அரசியல்ல இதெல்லாம் சகஜம்.. ஒன்றாகிய ராமதாஸ் – அன்புமணி.. அப்போ முகுந்தன்?

நான் தனிப்பட்ட முறையில் ஏதேனும் தவறு செய்திருந்தால், அதனை கண்டிக்கக் கூடிய உரிமையை சூர்யாவுக்கு அதிகமாகவே நான் கொடுத்து உள்ளேன்” எனத் தெரிவித்து உள்ளார். தற்போது, இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், சூர்யா ரசிகர்கள் சாந்தமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், பாலா கூறுவதை நம்ப முடியவில்லை என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

13 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

13 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

13 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

14 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

14 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

14 hours ago

This website uses cookies.