எவர்கிரீன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் வயதுமூப்பு காரணமாக நேற்று காலமானார்.
சென்னை: தமிழ் சினிமாவின் எவர்கிரீன் இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் கே.எஸ்.ரவிக்குமார். இவரது தாயார் ருக்மணி அம்மாள். இவர் வயது மூப்பு காரணமாக நேற்று (டிச.04) காலமானார். 1936ஆம் ஆண்டி பிப்ரவரி 14 அன்று பிறந்த ருக்மணி அம்மாளுக்கு வயது 88. இந்த சோக நிகழ்வை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.
தமிழ் சினிமா வரலாற்றில் 1990களில் தொடங்கி, சுமார் 30 ஆண்டுகளாக வெற்றி இயக்குனராகத் திகழ்ந்தவர் கே.எஸ். ரவிக்குமார். இவரது இயக்கத்தில் வெளியான பல படங்கள் வெள்ளி விழாவை ருசித்துள்ளது. அதிலும், பல நடிகர்கள் இவரது இயக்கத்தில் நடித்த பின்னர், முன்னணி நடிகர்களாகவும் மாறியுள்ளனர்.
குறிப்பாக, சரத்குமாரின் நட்புக்காக, நாட்டாமை, ரஜினிகாந்த் உடன் முத்து, படையப்பா, கமல்ஹாசன் உடன் அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம், விஜய் உடன் மின்சார கண்ணா, அஜித்குமார் உடன் வில்லன், வரலாறு மற்றும் நவரச நாயகன் கார்த்திக் உடன் பிஸ்தா ஆகிய படங்கள் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், 1990ஆம் ஆண்டில் ரகுமான் நடிப்பில் வெளியான ‘புரியாத புதிர்’ என்ற திரைப்படத்தை முதன் முதலில் இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் குறைந்த செலவில், குறுகிய காலத்துக்குள் எடுக்கப்பட்ட படமாக நல்ல விமர்சனத்தைப் பெற்றது. தமிழ் சினிமாவில் தரமான த்ரில்லர் படங்களுள் முக்கியமான படமாகவும் இது கருதப்படுகிறது.
இதையும் படிங்க: சொத்துக்களை அனாதை இல்லத்திற்கு எழுதி வைக்க சூப்பர் ஸ்டார் முடிவு.. அதிர்ச்சியில் குடும்பம்!
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக படங்கள் இயக்குவதை விட, படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதிலும், குணச்சித்திர கதாபாத்திரங்கள் தற்போது அவரது வாசலைத் தட்டுகிறது. அது மட்டுமின்றி, அவ்வப்போது நேர்காணல்களிலும் தலையைக் காட்டி வருகிறார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.