தென்னிந்திய சினிமாவில் 70களில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு அக்காலத்து இளைஞர்களை வசீகரித்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. இவர் கிட்டத்தட்ட கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதாவிற்கு இணையாக பார்க்கப்பட்டு வந்தார். 70ஸ் மற்றும் 80ஸ் வாலிப வட்டத்தை தனது கவர்ச்சி நடனத்தால் வசீகரித்து வைத்திருந்தார்.
திறமையான டான்சராக பார்க்கப்பட இவர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்கள் மற்றும், நடன மங்கையாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழை தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் பாலிவுட்டிலும் சுமார் 900 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருந்தார். பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள் தான் டிஸ்கோ சாந்தி. இவரது சகோதரி லலிதா குமாரி பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவி அவர்.
டிஸ்க்கோ சாந்தி தெலுங்கு திரைப்படங்களில் நடித்த போது தெலுங்கு நடிகர் ஸ்ரீ ஹரியை 1996ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். இதையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் ஸ்ரீஹரி இறந்துவிட்டார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றி டிஸ்க்கோ சாந்தி பல்வேறு விஷயங்களை குறித்து பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது நடிகர் சூர்யாவை எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறினார். அதன் பிறகு எனக்கு அரவிந்த் ஸ்வாமியை மிகவும் பிடிக்கும். அவர் தகளபதியில் மிகவும் அழகாக இருப்பார். கமல் ஹாசனுக்கு பிறகு என அரவிந்த் ஸ்வாமியை தான் பிடிக்கும். சூர்யா ஒருமுறை என் கணவரை பார்த்து ” அக்காவை கேட்டதாக சொல்லுங்க” என சொன்னாராம். அன்றிலிருந்து அவரை தம்பியாக எடுத்துக்கொண்டேன் என செம ஜாலியாக கூலாக பேசியுள்ளார்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.