சினி அப்டேட்ஸ்

கொஞ்சம் பேசித்தான் பாருங்களேன்.. ஜெயம் ரவி – ஆர்த்திக்கு டைம் கொடுத்த கோர்ட் !

ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரும் சமரச மையத்தில் பேசி தீர்வு காண குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் ஜெயம் ரவி – ஆர்த்தி. இவர்கள் இருவருக்கும் சமீப காலமாக மனக்கசப்புகள் இருந்து வந்ததை அவர்களது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலமாக அறிய முடிந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இருவரும் பிரிவு அறிக்கையை வெளியிட்டனர்.

இதனிடையே, ஆர்த்தியிடம் இருந்து ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (நவ.15) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயம் ரவி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். அதேநேரம், ஆர்த்தி காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரும் சமரச மையத்தில் பேசி தீர்வு காண வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். இதனால் இருவரும் ஆலோசனைகளைப் பெற்று சமரச மையத்தில் விரைவில் பேச உள்ளனர். மேலும், இருவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக இருக்கிறது.

ஜெயம் ரவி – ஆர்த்தி திருமணம்: முன்னதாக, கடந்த 2009ஆம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தியை ஜெயம் ரவி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த தம்பதி மகிழ்ச்சியாகவே தங்களது இல்லற வாழ்வை வசித்து வந்தனர்.

இதையும் படிங்க; மகனுக்காக படப்பிடிப்பில் காஜல் அகர்வால் செய்த செயல் : ராயல் சல்யூட்!

இதனிடையே தான், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். முக்கியமாக, சமூக வலைத்தளங்களில் தனது மனைவியின் புகைப்படங்களையும், பெயரையும் ஜெயம் ரவி நீக்கி இருந்தது, இருவருக்கும் இடையே விரிசல் இருந்ததை தெரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

15 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

15 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

16 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

16 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

17 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

17 hours ago

This website uses cookies.