ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரும் சமரச மையத்தில் பேசி தீர்வு காண குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் ஜெயம் ரவி – ஆர்த்தி. இவர்கள் இருவருக்கும் சமீப காலமாக மனக்கசப்புகள் இருந்து வந்ததை அவர்களது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலமாக அறிய முடிந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இருவரும் பிரிவு அறிக்கையை வெளியிட்டனர்.
இதனிடையே, ஆர்த்தியிடம் இருந்து ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (நவ.15) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயம் ரவி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். அதேநேரம், ஆர்த்தி காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரும் சமரச மையத்தில் பேசி தீர்வு காண வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். இதனால் இருவரும் ஆலோசனைகளைப் பெற்று சமரச மையத்தில் விரைவில் பேச உள்ளனர். மேலும், இருவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக இருக்கிறது.
ஜெயம் ரவி – ஆர்த்தி திருமணம்: முன்னதாக, கடந்த 2009ஆம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தியை ஜெயம் ரவி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த தம்பதி மகிழ்ச்சியாகவே தங்களது இல்லற வாழ்வை வசித்து வந்தனர்.
இதையும் படிங்க; மகனுக்காக படப்பிடிப்பில் காஜல் அகர்வால் செய்த செயல் : ராயல் சல்யூட்!
இதனிடையே தான், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். முக்கியமாக, சமூக வலைத்தளங்களில் தனது மனைவியின் புகைப்படங்களையும், பெயரையும் ஜெயம் ரவி நீக்கி இருந்தது, இருவருக்கும் இடையே விரிசல் இருந்ததை தெரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.