மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: தமிழ் சினிமாவின் தற்போதைய அதிகாரத்தில் முன்னணி மற்றும் முக்கியமான இயக்குனராக மாரி செல்வராஜ் அறியப்படுகிறார். பரியேறும் பெருமாள் முதல் வாழை வரை சமுதாயக் கருத்துகள், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை திரையில் தத்ரூபமாக காட்சிப்படுத்துவதில் கெட்டிக்காரர் என்றும் சொல்லப்படுகிறார்.
இந்த நிலையில், இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, மாஸ்ட்ரோ படத்திற்குப் பிறகு தனுஷ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி பெயர் அடிபடுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரணம், விஜய் சேதுபதியின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மகாராஜா’ படத்தின் மாபெரும் வெற்றி தான். நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமாக ரிலீசான இதில் அனுராக் காஷ்யப், நட்டி, அபிராமி, திவ்ய பாரதி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வணிக ரீதியிலான வெற்றியையும் பெற்றது.
அது மட்டுமல்லாமல், அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 2 படமும் வெளியாக இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் சூரி, மஞ்சு வாரியர், சேத்தன் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: “லப்பர் பந்து”படத்தால் இயக்குனருக்கு நடந்த ஏமாற்றம்..கூட இருந்தே குழி பறித்த தயாரிப்பாளர்..!
அதேநேரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் இறுதியாக வெளியான வாழை திரைப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியது. மேலும், தற்போது துருவ் விக்ரம் உடன் பைசன் என்ற படத்தையும் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.