உலக அழகின்னு நெனப்பா? செல்ஃபி கேட்ட ரசிகரிடம் சீன் போட்ட பிரியங்கா மோகன்!

Author:
22 September 2024, 5:41 pm

தமிழ் சினிமாவின் தற்போதைய இளம் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.

Priyanka Mohan

டான் திரைப்படத்தில் இணைந்து மீண்டும் அவருடன் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 100 கோடியை வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்து. பிரியங்கா மோகன் தனுஷ் உடன் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்த பிறகு தற்போது ஜெயம் ரவியுடன் பிரதர் திரைப்படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார் .

இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று சென்னையில் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை பிரியங்கா மோகனிடம் ரசிகர்கள் முந்தி அடித்துக்கொண்டு செல்பி கேட்டபோது அவர் ஓவராக சீன் போட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

priyanka chopra - updatenews360

இதோ அந்த வீடியோ: உன் கூட இருக்கேன்னு சொல்றவனுங்கள நம்பதீங்க… தாக்கப்பட்டார்கள் குரேஷி, சுனிதா ஷகிலா!

அதாவது காருக்குள் இருந்து இறங்குவதற்கு முன்னே ரசிகர்கள் தன்னிடம் செல்பி கேட்டதால் அவர் உள்ளவே வந்திருங்களேன்… உள்ளவே வந்து செல்பி எடுத்துக்கோங்க… கூட வந்து பக்கத்துல உட்கார்ந்து கொள்ளுங்கள் என்ற மாதிரி ஓவராக சீன் போட்டு பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக அம்மணிக்கு மனசுல பெரிய உலக அழகின்னு நெனப்பா? என பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!