Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ண போவதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு தொழில்களில் AI மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தப்போகிறது. இதில் சினிமாவும் விதிவிலக்கல்ல.
குறிப்பாக AI மிகவும் அதிகளவில் பயன்படப்போவது சினிமாத்துறையினருக்குத்தான் என்பது நிதர்சனம். கிராபிக்ஸ் தொழில்நுட்பம், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, திரைக்கதை அமைத்தல் போன்ற சினிமாவின் பல துறைகளில் AI ஒரு முக்கிய பங்கை ஆற்ற தொடங்கியுள்ளது. இதனால் ஒரு பக்கம் பல சாதகங்கள் இருந்தாலும் இன்னொரு பக்கம் பாதகங்களும் உள்ளது தவிர்க்கமுடியாதது. AI தொழில்நுட்பத்தால் பல தொழில்களில் பலரும் வேலை இழக்கப்போகும் அபாய காலமும் விரைவில் வரும் எனவும் எச்சரிக்கைப்படுகிறது. இந்த பாதகங்களை தாண்டி இது ஒரு தொழில்நுட்ப புரட்சியாகவும் பார்க்கப்படுகிறது.
சமீப காலமாக சினிமாக்களில் பல காட்சிகளை உருவாக்குதலில் AI ஒரு முக்கிய பங்கை ஆற்றி வருகிறது. சென்ற ஆண்டு தமிழில் வெளியான “GOAT” திரைப்படத்தில் கூட AI தொழில்நுட்பத்தால் விஜயகாந்தை நமது கண் முன் கொண்டு வந்திருந்தார்கள். அந்த வகையில் தற்போது AI தொழில்நுட்பம் ஒரு பிரபல தனுஷ் திரைப்படத்தில் புகுந்து விளையாடப்போகிறதாம்.
2013 ஆம் ஆண்டு தனுஷ், சோனம் கபூர் ஆகியோர் நடித்து பாலிவுட்டில் வெளியான “ராஞ்சனா” திரைப்படத்தை நம்மில் பலரும் மறந்திருக்கமாட்டோம். இத்திரைப்படம் தமிழில் “அம்பிகாபதி” என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. முழுக்க முழுக்க ஒரு சிக்கலான காதல் கதையை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் “ராஞ்சனா” திரைப்படத்தின் தொடர்ச்சியாக “தேரே இஷ்க் மே” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இது “ராஞ்சனா” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். “தேரே இஷ்க் மே” திரைப்படத்தில் தனுஷ், கிரித்தி ஷெனான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
“ராஞ்சனா” திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தனுஷின் கதாபாத்திரம் இறந்துப்போய்விடும். தற்போது ராஞ்சனா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் “ராஞ்சனா” திரைப்படத்தின் கிளைமேக்ஸையே மாற்றி மறுவெளியீடு செய்யப்போகிறார்களாம். அதாவது AI தொழில்நுட்பத்தின் மூலம் “ராஞ்சனா” திரைப்படத்தின் கிளைமேக்ஸில் தனுஷ் உயிர்பிழைப்பது போல் காட்சியை மாற்றி வடிவமைக்கப்போகிறார்களாம். இந்த புதிய கிளைமேக்ஸுடன் “ராஞ்சனா” திரைப்படம் மறு வெளியீடு காண உள்ளதாம். இதன் தொடர்ச்சியாக “ராஞ்சனா 2” அதாவது “தேரே இஷ்க் மே” திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடித்து வருவதால், அவர் முதல் பாகத்தில் இறப்பது போன்ற காட்சி இருப்பது லாஜிக்காக இருக்காது என்பதால் இந்த முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.