சினி அப்டேட்ஸ்

அமரன் கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாம்.. இயக்குனரிடம் விஜய் ஏக்கம்!

அமரன் படத்தைப் பார்த்த பின்பு, விஜய் கூறியது என்ன என்பது குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மனம் திறந்து பேசி உள்ளார்.

சென்னை: இயக்குனர் ராஜ்குமார் பெரியாசாமி, சமீபத்தில் நடிகர் விஜயைச் சந்தித்தார். இந்த நிலையில், இது குறித்து நேர்காணல் ஒன்றில் கூறி உள்ளார். அதில் பேசிய அவர், “அமரன் படம் கொஞ்சம் முன்பே வெளியாகி இருந்தால் நாம் இணைந்து பணியாற்றி இருக்கலாம். ஆனால், தற்போது நிலைமை வேறாக இருக்கிறது.

நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது அமரன் படத்தைப் பற்றி, அதான் உலகமே சொல்கிறதே.. உங்களை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என விஜய் கூறியதாகக் கூறினார். இந்தச் சந்திப்பின் போது, விஜய் – ராஜ்குமார் பெரியசாமி இருவரும் சில வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தினைப் பார்த்து ரசித்துள்ளனர்.

தொடர்ந்து, இருவரும் சேர்ந்து புதிதான புகைப்படம் ஒன்றையும் எடுத்து உள்ளனர். இந்த சந்திப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இதனால் மிகவும் பெருமைக்குரிய மனிதராக மாறியதாகவும் ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி பொங்க நேர்காணலில் பேசியுள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.

இந்த பாராட்டிற்கெல்லாம் காரணம், கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவரைப் பெற்ற அமரன் படம். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும்.

இதையும் படிங்க: தெரியாத கடவுளை விட தெரிந்த மனிதனை நம்பலாம் : அரசியலில் விஜய் குறித்து பிரபலம்!

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் வெளியான இப்படம், இஸ்லாமியர்களை தவறாகச் சித்தரிப்பதாக எதிர்ப்புகள், திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்களையும் சந்தித்தது. இதனிடையே, சென்னை ராணுவப் பயிற்சி மையம் சார்பில் சிவகார்த்திகேயன் கெளரவிக்கப்பட்டார்.

Hariharasudhan R

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

7 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

8 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

9 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

10 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

11 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

11 hours ago

This website uses cookies.