சினி அப்டேட்ஸ்

நாங்கள் நினைத்ததை விஜய் செய்யவே இல்லை.. ஷோபா பேச்சு!

நாங்கள் விஜய் மருத்துவராக வர வேண்டும் என நினைத்தோம், ஆனால் அவர் நடிப்பில் சென்று இப்போது எங்கோ இருக்கிறார் என அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் கூறியுள்ளார்.

சென்னை: தமிழ் சினிமாவில், சட்ட ரீதியான திரைப்படங்களை இயக்கி, அதன் மூலம் தென்னிந்திய சினிமாவின் திசை திருப்பலில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பங்கு உண்டு. இப்படிப்பட்ட இயக்குனரின் மகனாகவும், திரை வாரிசாகவும் நுழைந்தவர் விஜய். முதலில் தந்தையைப் போன்றே சமூக ரீதியான படங்களில் நடித்தவர் பின்னர் காதலை மையமாகக் கொண்ட படங்களில் நடித்தார்.

அதன் பிறகு ஆக்ஷன் ஹீரோவாக மாறிய விஜய், இறுதியாக கருத்து சொல்லும் நடிகராக மாறினார். இந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் பட்டியலில், பாக்ஸ் ஆபிஸ் கிங்காக ஜொலிக்கிறார். இதனிடையே, தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் துவக்கி உள்ளார். இதன் முதல் மாநில மாநாட்டையும் நிகழ்த்தி, ஆளும், எதிர் என அனைத்து தரப்பு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவிக்கும் அளவான இடத்தில் உள்ளார்.

பல்வேறு விமர்சனங்கள், இடையூறுகள் அமையப் பெற்றாலும், விஜய்க்கென தனிக் கூட்டமே உண்டு. இப்படி மிகப்பெரிய இடத்தை அடைந்துள்ள விஜய், ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்பதே அவரது பெற்றோரின் ஆசையாக இருந்து உள்ளது.

இது குறித்து விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் தனியார் மாத இதழ் நடத்திய விருது விழாவில் மேலும் கூறுகையில், ” விஜய் மருத்துவராக வேண்டும் என்று டாக்டர், டாக்டர் எனச் சொன்னோம். ஆனால், விஜய் ஆக்டர், ஆக்டர் என்று சொல்லி நடிகராகிவிட்டார்.

இதையும் படிங்க: அஜித்தை கொண்டாடும் கோலிவுட்… ஏன் தெரியுமா?

இப்போது வேறொரு பரிணாமத்தை எடுத்துள்ளார். சிறுவயதில் இருந்து இப்போது வரை விஜய் என்ன நினைப்பாரோ, அதைத்தான் செய்வார். நினைத்ததைச் செய்து முடிக்காமல் அவர் விடமாட்டார். அதுதான் விஜய்யின் குணம்” எனக் கூறினார்.

AddThis Website Tools
Hariharasudhan R

Recent Posts

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…

20 minutes ago

ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து? பொது இடத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…

சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…

29 minutes ago

பிரதமர் மோடி பதவி விலகல்? தேசிய களத்தில் சூடுபிடித்த முக்கிய கருத்து.. பாஜக நிலைப்பாடு என்ன?

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…

1 hour ago

அக்கட தேசத்து நடிகையுடன் ஊர் சுற்றும் தனுஷ்.. வைரலாகும் வில்லங்கமான போட்டோஸ்!

பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…

1 hour ago

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்- பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை போட்டுடைத்த உதவி இயக்குனர்

கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…

1 hour ago

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

2 hours ago