நாங்கள் விஜய் மருத்துவராக வர வேண்டும் என நினைத்தோம், ஆனால் அவர் நடிப்பில் சென்று இப்போது எங்கோ இருக்கிறார் என அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ் சினிமாவில், சட்ட ரீதியான திரைப்படங்களை இயக்கி, அதன் மூலம் தென்னிந்திய சினிமாவின் திசை திருப்பலில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பங்கு உண்டு. இப்படிப்பட்ட இயக்குனரின் மகனாகவும், திரை வாரிசாகவும் நுழைந்தவர் விஜய். முதலில் தந்தையைப் போன்றே சமூக ரீதியான படங்களில் நடித்தவர் பின்னர் காதலை மையமாகக் கொண்ட படங்களில் நடித்தார்.
அதன் பிறகு ஆக்ஷன் ஹீரோவாக மாறிய விஜய், இறுதியாக கருத்து சொல்லும் நடிகராக மாறினார். இந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் பட்டியலில், பாக்ஸ் ஆபிஸ் கிங்காக ஜொலிக்கிறார். இதனிடையே, தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் துவக்கி உள்ளார். இதன் முதல் மாநில மாநாட்டையும் நிகழ்த்தி, ஆளும், எதிர் என அனைத்து தரப்பு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவிக்கும் அளவான இடத்தில் உள்ளார்.
பல்வேறு விமர்சனங்கள், இடையூறுகள் அமையப் பெற்றாலும், விஜய்க்கென தனிக் கூட்டமே உண்டு. இப்படி மிகப்பெரிய இடத்தை அடைந்துள்ள விஜய், ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்பதே அவரது பெற்றோரின் ஆசையாக இருந்து உள்ளது.
இது குறித்து விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் தனியார் மாத இதழ் நடத்திய விருது விழாவில் மேலும் கூறுகையில், ” விஜய் மருத்துவராக வேண்டும் என்று டாக்டர், டாக்டர் எனச் சொன்னோம். ஆனால், விஜய் ஆக்டர், ஆக்டர் என்று சொல்லி நடிகராகிவிட்டார்.
இதையும் படிங்க: அஜித்தை கொண்டாடும் கோலிவுட்… ஏன் தெரியுமா?
இப்போது வேறொரு பரிணாமத்தை எடுத்துள்ளார். சிறுவயதில் இருந்து இப்போது வரை விஜய் என்ன நினைப்பாரோ, அதைத்தான் செய்வார். நினைத்ததைச் செய்து முடிக்காமல் அவர் விடமாட்டார். அதுதான் விஜய்யின் குணம்” எனக் கூறினார்.
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.