ரசிகர்களுக்கு நாம் கொடுக்க மட்டுமே வேண்டும், படைப்பாளியை விட ரசிகர்களுக்கு அதிக அறிவு இருக்கிறது என இயக்குநர் பாலா கூறியுள்ளார்.
சென்னை: திரைப்பட இயக்குநர் பாலா, யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்து உள்ளார். அதில் பேசிய அவர், “பாலுமகேந்திரா சாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட ஒன்று இதுதான். ஒருவன் பசி என்று கூறினால், அவனுக்கு வாழைப்பழத்தைக் கொடு, அவனால் உரித்து திங்க முடியாத நிலையில் இருக்கிறானா?
அப்படியென்றால், வாழைப்பழத்தை உரித்து கொடு, அதை விட்டுவிட்டு வாழைப்பழத்தை ஏன் ஊட்டி விடுகிறாய்? அது அவனுடைய வேலை. அதற்கான அவசயமும் அங்கு இல்லை. அவனுக்கென்று அறிவு இருக்கிறது. எனவே, அவன் அதனைச் செய்து கொள்வான்.
நீ (பாலா) 10 படங்களோ, 15 படங்களோ எடுக்கிறாய், ஆனால், ரசிகனான அவன் நூற்றுக்கணக்கான படங்களைப் பார்க்கிறான். எனவே, உன்னை விட அவனுக்கு தான் அறிவு அதிகம். படம் எடுக்கும் இயக்குநர்களை விட, ரசிகர்களே மிகச் சிறந்த படைப்பாளி.
நூறு படம் பார்க்கும் அவன் மிகவும் எளிதாக எங்கு தவறுகள் உள்ளது எனக் கண்டுபிடித்து விடுவான். எனவே, ரசிகர்களை அவ்வளவு எளிதாக நாம் ஏமாற்றிவிட முடியாது. நீ (இயக்குநர்கள்) சொல், நான் (ரசிகர்கள்) புரிந்துகொள்வேன் என்பதே நியதி. அதேநேரம், ரசிகர்களுக்கு கிளாஸ் எடுக்கவும் முடியாது” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குடியரசு தின பதக்கம் பெற்ற காவலர் குடிபோதையில் பெண்ணிடம் அத்துமீறல்!
பாலா இயக்கத்தில், அருண் விஜய், ரோஷினி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம், ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் தினத்தை ஒட்டி வெளியாக இருக்கிறது. முன்னதாக, இந்தப் படத்தில் சூர்யா நடிக்கவிருந்த நிலையில், அது இருவர் ஒத்துழைப்போடே நடைபெற்றது என்றும் சமீபத்தில் பாலா விளக்கம் அளித்திருந்தார்.
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
This website uses cookies.