பொதுவாக வீட்டில் மதிய உணவுக்காக வடித்த சாதம் மீந்துவிட்டால் அதனை இரவில் சாப்பிடுவதற்கு நிச்சயமாக போட்டி நடப்பது எல்லார் வீட்டிலும் நடக்கும் வழக்கமான ஒன்றுதான். இறுதியாக மீதமான அந்த சாதத்தை அம்மாக்களே சாப்பிடும்படி ஆகிவிடும். ஆனால் இனியும் அப்படி நடக்காமல் இருக்க மீந்து போன சாதத்தை வைத்து பத்தே நிமிடங்களில் மொறு மொறுவென்று ஒரு ஸ்நாக்ஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வடித்த சாதம் – 2 கப்
அரிசி மாவு – ½ கப்
உருளைக்கிழங்கு – 2
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
ஆப்ப சோடா – 2 சிட்டிகை
சில்லி ஃப்ளேக்ஸ்
கொத்தமல்லி
புதினா
கறிவேப்பிலை
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் 2 கப் வடித்த சாதம், 2 உருளைக்கிழங்கு, 1/2 கப் அரிசி மாவு, 2 டேபிள் ஸ்பூன் தயிர், ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, 1/4 கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒருவேளை உங்களுக்கு வடை மாவு பதத்திற்கு வரவில்லை என்றால் கூடுதலாக கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து சரி செய்து கொள்ளவும்.
அடுத்து அரைத்து வைத்த இந்த மாவில் 2 சிட்டிகை ஆப்ப சோடா, சிறிதளவு சில்லி ஃப்ளேக்ஸ், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இதையும் வாசிக்கலாமே: ஆவி பறக்க இட்லி சுட்டு இந்த குருமா வச்சு சாப்பிட்டு பாருங்க… இட்லி உள்ள போறதே தெரியாது!!!
இப்போது கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நாம் கலந்து வைத்துள்ள மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போண்டாவாக போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து சுட சுட டீயோடு பரிமாறி பாருங்கள்… எனக்கு வேண்டாம் உனக்கு வேண்டாம் என்று சொன்னவர்கள் எனக்கு , உனக்கு என்று அடம்பிடித்து சாப்பிடுவார்கள்.
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
This website uses cookies.