கடலைப்பருப்பு பயன்படுத்தி காரசாரமான சட்னி ரெசிபி பற்றி தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்த சட்னியானது சூடான இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்றவற்றிற்கு சூப்பராக இருக்கும். அது மட்டும் இல்லாமல் சூடான சாதத்திற்கு கூட இதனை போட்டு சாப்பிடலாம்.
இதனை செய்வதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 8 வர மிளகாய் அளவிற்கு சேர்த்து வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். அதே எண்ணெயில் 4 தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் கொட்டி கொள்ளவும்.
இப்போது தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரண்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராக மாறும் வரை வதக்கி கொள்ளவும். பின்னர் இரண்டு தக்காளி சேர்த்து அதனையும் பச்சை வாசனை வராத அளவிற்கு வதக்கவும்.
இப்போது பொருட்கள் அனைத்தும் ஆறியதும் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். இதனை தாளிக்க எண்ணெயை காய விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டவும். அவ்வளவு தான்… காரசாரமான கடலைப்பருப்பு சட்னி தயார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.