கடலைப்பருப்பு பயன்படுத்தி காரசாரமான சட்னி ரெசிபி பற்றி தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்த சட்னியானது சூடான இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்றவற்றிற்கு சூப்பராக இருக்கும். அது மட்டும் இல்லாமல் சூடான சாதத்திற்கு கூட இதனை போட்டு சாப்பிடலாம்.
இதனை செய்வதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 8 வர மிளகாய் அளவிற்கு சேர்த்து வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். அதே எண்ணெயில் 4 தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் கொட்டி கொள்ளவும்.
இப்போது தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரண்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராக மாறும் வரை வதக்கி கொள்ளவும். பின்னர் இரண்டு தக்காளி சேர்த்து அதனையும் பச்சை வாசனை வராத அளவிற்கு வதக்கவும்.
இப்போது பொருட்கள் அனைத்தும் ஆறியதும் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். இதனை தாளிக்க எண்ணெயை காய விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டவும். அவ்வளவு தான்… காரசாரமான கடலைப்பருப்பு சட்னி தயார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.