ஆந்திராவின் ஸ்பெஷல் ரெசிபியான கொத்தமல்லி ஊறுகாய் பற்றி தான் இந்த பதிவு. இதனை ஊறுகாய் என்றும் சொல்லலாம், துவையல் என்றும் கூறலாம். இது சுட சுட சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து விதமான உணவுகளுக்கும் செம காம்பினேஷனாக இருக்கும். இப்போது இந்த கொத்தமல்லி ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி தழை- ஒரு கைப்பிடி
கடுகு- 1 தேக்கரண்டி
வெந்தயம்- 1/2 தேக்கரண்டி சீரகம்- 1/2 தேக்கரண்டி
வர மிளகாய்- 9
கறிவேப்பிலை- ஒரு கொத்து
புளி
உப்பு
நல்லெண்ணெய்
செய்முறை:
*ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1/2 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து வறுக்கவும்.
*இது பாதி வறுப்பட்டதும் 1/2 தேக்கரண்டி சீரகம் சேர்த்து வறுத்து கொள்ளலாம்.
*மூன்றுமே வறுப்பட்டவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து தனியாக வைக்கவும்.
*இப்போது அதே கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 8 வர மிளகாய் சேர்த்து வறுத்து ஒரு தட்டில் ஆற வைக்கவும்.
*பின்னர் சுத்தம் செய்த கொத்தமல்லி தழையை போட்டு அதையும் வதக்கி எடுத்து கொள்ளலாம்.
*தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட புளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி வைக்கவும்.
*இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்த கொத்தமல்லி, வர மிளகாய், புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
*அடுத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி 1/2 தேக்கரண்டி கடுகு, 1 வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
*பின்னர் அரைத்து வைத்த கொத்தமல்லி பேஸ்ட் மற்றும் கடுகு பொடியையும் சேர்த்து கிளறவும்.
*இதிலுள்ள தண்ணீர் அனைத்தும் வற்றியதும் அடுப்பை அணைத்து விடலாம்.
*அவ்வளவு தான்… காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி ஊறுகாய் தயார்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.