சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சப்பாத்தியை விட பூரி சாப்பிடுவதையே விரும்புவார்கள். ஆனால் எப்போதும் பூரியை கோதுமை, மைதா மாவு வைத்து செய்வதற்கு பதிலாக அரிசி மாவு மற்றும் தேங்காய் துருவல் வைத்து வித்தியாசமாக செய்து பாருங்கள்.
அரிசி மாவில் பூரி செய்வதற்கு இரண்டு கப் அரிசி மாவு எடுத்து கொள்ளவும். எந்த கப்பில் அரிசி மாவு அளந்தீர்களோ அதே கப்பில் ஒரு கப் அளவு தேங்காய் துருவல் எடுத்து கொள்ளவும். இந்த தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நைசாக அரைத்து கொள்ளவும்.
இதனை அரிசி மாவுடன் சேர்த்து கலந்து வையுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இந்த தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசையவும்.
பின்னர் இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மாவு சேர்த்து விரித்து கொள்ளவும். அரிசி மாவு என்பதால் ஓரங்களில் கிராக் விழலாம். இதனை சரிசெய்ய ஒரு கிண்ணத்தை வைத்து ரௌண்டாக்கி கொள்ளலாம்.
இப்போது கடாயில் எண்ணெயை சூடாக்கி பூரியை போட்டு எடுத்தால் சுவையான அரிசி மாவு, தேங்காய் பூரி தயார். இதற்கு நீங்கள் வழக்கமாக சாப்பிடும் பூரி மசாலா, பட்டர் மசாலா அல்லது சாம்பார் போன்ற காம்பினேன்ஷன்கள் அருமையாக இருக்கும்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.