நெக்ஸ்ட் டைம் இனிப்பு சாப்பிடணும் போல இருந்தா இந்த இளநீர் பாயாசம் ட்ரை பண்ணி பாருங்க… அடிக்கடி செய்ய ஆரம்பிச்சுடுவீங்க!!!

Author: Hemalatha Ramkumar
1 அக்டோபர் 2024, 7:27 மணி
Quick Share

பொதுவாக விசேஷம் என்றாலே நாம் பருப்பு பாயாசம் அல்லது சேமியா பாயாசம் செய்வது வழக்கம். ஆனால், சற்று வித்தியாசமாக முயற்சிக்க நினைத்தால் நீங்கள் இளநீர் பாயாசம் செய்து அசத்தலாம். இதனை பத்தே நிமிடங்களில் சுலபமாக செய்துவிடலாம். 

தேவையான பொருட்கள்:

இளநீர் வழுக்கை – 3/4 கப் 

இளநீர் தண்ணீர் – 1 கப்

பால் – 1/2 லிட்டர்

ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை

கண்டென்ஸ்ட் மில்க் – 3 தேக்கரண்டி

நெய் – 1 தேக்கரண்டி

முந்திரி, பாதாம், திராட்சை – சிறிது

செய்முறை: 

*பாலைக் கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கெட்டியாக விடவும்.

*பாலை இறக்கி நன்றாக குளிர வைக்கவும்.

*இளநீர் வழுக்கை மற்றும் இளநீர் தண்ணீரை ஒன்றாக சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

*நெய்யில் பாதாம், முந்திரி, திராட்சையை வதக்கிக் கொள்ளவும்.

*அரைத்து வைத்ததை பாலில் சேர்க்கவும்.

*அதில் கண்டென்ஸ்ட் மில்க், ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வதக்கிய பாதாம், முந்திரி, திரட்சியை சேர்த்து சில்லென்று பருகவும்.

குறிப்பு: 

பால் நன்றாக ஆரிய பின்னரே அதில் அரைத்து வைத்ததை சேர்க்க வேண்டும். பாலை பிரிட்ஜில் வைத்தும் சேர்க்கலாம். பாலுக்கு பதில் தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம். இது எளிதில் கெட்டுப்போகும் என்பதால் அதே நாள் பருகுவது நல்லது.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 16

    0

    0

    மறுமொழி இடவும்