பொதுவாக விசேஷம் என்றாலே நாம் பருப்பு பாயாசம் அல்லது சேமியா பாயாசம் செய்வது வழக்கம். ஆனால், சற்று வித்தியாசமாக முயற்சிக்க நினைத்தால் நீங்கள் இளநீர் பாயாசம் செய்து அசத்தலாம். இதனை பத்தே நிமிடங்களில் சுலபமாக செய்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:
இளநீர் வழுக்கை – 3/4 கப்
இளநீர் தண்ணீர் – 1 கப்
பால் – 1/2 லிட்டர்
ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை
கண்டென்ஸ்ட் மில்க் – 3 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
முந்திரி, பாதாம், திராட்சை – சிறிது
செய்முறை:
*பாலைக் கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கெட்டியாக விடவும்.
*பாலை இறக்கி நன்றாக குளிர வைக்கவும்.
*இளநீர் வழுக்கை மற்றும் இளநீர் தண்ணீரை ஒன்றாக சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
*நெய்யில் பாதாம், முந்திரி, திராட்சையை வதக்கிக் கொள்ளவும்.
*அரைத்து வைத்ததை பாலில் சேர்க்கவும்.
*அதில் கண்டென்ஸ்ட் மில்க், ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வதக்கிய பாதாம், முந்திரி, திரட்சியை சேர்த்து சில்லென்று பருகவும்.
குறிப்பு:
பால் நன்றாக ஆரிய பின்னரே அதில் அரைத்து வைத்ததை சேர்க்க வேண்டும். பாலை பிரிட்ஜில் வைத்தும் சேர்க்கலாம். பாலுக்கு பதில் தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம். இது எளிதில் கெட்டுப்போகும் என்பதால் அதே நாள் பருகுவது நல்லது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.