பொதுவாக விசேஷம் என்றாலே நாம் பருப்பு பாயாசம் அல்லது சேமியா பாயாசம் செய்வது வழக்கம். ஆனால், சற்று வித்தியாசமாக முயற்சிக்க நினைத்தால் நீங்கள் இளநீர் பாயாசம் செய்து அசத்தலாம். இதனை பத்தே நிமிடங்களில் சுலபமாக செய்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:
இளநீர் வழுக்கை – 3/4 கப்
இளநீர் தண்ணீர் – 1 கப்
பால் – 1/2 லிட்டர்
ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை
கண்டென்ஸ்ட் மில்க் – 3 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
முந்திரி, பாதாம், திராட்சை – சிறிது
செய்முறை:
*பாலைக் கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கெட்டியாக விடவும்.
*பாலை இறக்கி நன்றாக குளிர வைக்கவும்.
*இளநீர் வழுக்கை மற்றும் இளநீர் தண்ணீரை ஒன்றாக சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
*நெய்யில் பாதாம், முந்திரி, திராட்சையை வதக்கிக் கொள்ளவும்.
*அரைத்து வைத்ததை பாலில் சேர்க்கவும்.
*அதில் கண்டென்ஸ்ட் மில்க், ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வதக்கிய பாதாம், முந்திரி, திரட்சியை சேர்த்து சில்லென்று பருகவும்.
குறிப்பு:
பால் நன்றாக ஆரிய பின்னரே அதில் அரைத்து வைத்ததை சேர்க்க வேண்டும். பாலை பிரிட்ஜில் வைத்தும் சேர்க்கலாம். பாலுக்கு பதில் தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம். இது எளிதில் கெட்டுப்போகும் என்பதால் அதே நாள் பருகுவது நல்லது.
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.