பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்ற சுவையான சைடிஸ். நிறைய பேர் கடைகளில் வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால், வீட்டிலேயே ஆரோக்கியமாகவும், சுவையாகவும், செய்யலாம். சப்பாத்தி மட்டுமின்றி நாண், புலாவ், ப்ரைடு ரைஸ், போன்ற ரெசிபிகளுக்கு சைடிஸாகவும் சாப்பிடலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பன்னீர் பட்டர் மசாலாவை எளிமையான முறையில் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் – 200(கிராம்)
வெங்காயம் – 2
தக்காளி – 3
பூண்டு – 3 பற்கள்
முந்திரி – 7
பச்சைமிளகாய் – 2
இஞ்சி – 1 இன்ச்
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பால் – 1 கப்
வெண்ணெய் – 3 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
கஸ்தூரிமேத்தி – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
*முதலில் வெதுவெதுப்பான நீரில் பன்னீரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
*பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய், இஞ்சி, முந்திரி சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
*பிறகு, வதக்கிய மசாலாவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
*பின்பு, அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் சேர்க்கவும். பின்பு, அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
*வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
*பிறகு, வதக்கிய மசாலா கலவை எண்ணெய் பிரிந்து வந்ததும்.
*பன்னீர் மற்றும் பால் சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் கழித்து கஸ்தூரிமேத்தி சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின், எண்ணெய் பிரிந்து வந்ததும். சிறிதளவு வெண்ணெய் மற்றும் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
*இப்போது, சுவையான, ஆரோக்கியமான பன்னீர் பட்டர் மசாலா தயார்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.