நீங்கள் எப்பேர்ப்பட்ட மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தாலும், முடக்கத்தான் கீரை உங்கள் வலி அனைத்தையும் போக்கி உங்களை குணப்படுத்தக் கூடிய ஒன்று. ரோட்டோரங்களில் வளரும் இந்த கொடியை பலர் கண்டுக்கொள்வதில்லை. பணம் எதுவும் செலவு செய்யாமல் உங்கள் மூட்டு வலியை போக்கும் இயற்கை மருந்து முடக்கத்தான் கீரை. இத்தகைய முடக்கத்தான் கீரையைக் கொண்டு இட்லி எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி- 4 படி
உளுந்து- 3/4 படி
வெந்தயம்- 2 தேக்கரண்டி
முடக்கத்தான் கீரை- 2 கப்
வாழை இலை- 1
நல்லெண்ணெய்- ஒரு தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
*இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் ஆகிய மூன்று பொருட்களையும் குறைந்தது 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
*இதனை கிரைண்டரில் போட்டு அரைத்து கொள்ளவும்.
*அரைந்தவுடன் முடக்கத்தான் கீரையையும் சேர்த்து அரைக்கவும்.
*மாவுக்கு தேவையான உப்பு சேர்த்து கரைத்து கொள்ளுங்கள்.
*மாவு புளித்ததும் இட்லி தட்டில் வாழை இலையை வைத்து நல்லெண்ணெய் தடவி, மாவை ஊற்றவும்.
*ஆவியில் வேக வைத்து எடுத்தால் ஆரோக்கியமான முடக்கத்தான் இட்லி தயார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.