நாம் அனைவரும் ஒரே மாதிரியான பொருட்கள் பயன்படுத்தி சாம்பார் செய்தாலும் ஒவ்வொருவர் செய்யும் சாம்பாரும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் பயன்படுத்தும் சாம்பார் பொடி தான். சாம்பார் பொடி அரைக்க பயன்படுத்தும் பொருட்களை சரியான அளவுகளில் எடுப்பது மிகவும் அவசியம். எனவே சாம்பார் செய்ய முக்கிய பொருளாக இருக்கும் சாம்பார் பொடியை எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வர மல்லி – 1/2 கப்
வர மிளகாய்- 17
மிளகு- ஒரு தேக்கரண்டி
சீரகம்- 1 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 1/2 தேக்கரண்டி
கடுகு- 1 1/2 தேக்கரண்டி
வெந்தயம்- 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- இரண்டு கொத்து
செய்முறை:
*ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வர மல்லி விதைகள், வர மிளகாய், மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போன்ற பொருட்களை சேர்த்து தனித்தனியாக டிரை ரோஸ்ட் செய்யவும். எண்ணெய் பயன்படுத்தாமல் வறுக்க வேண்டும்.
*அடுப்பை அணைத்து விட்டு, கடாய் சூடாக இருக்கும் போதே மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூளை வறுத்து எடுத்து கொள்ளவும்.
*வறுத்து வைத்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்தால் கம கம சாம்பார் பொடி தயார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.