“முருங்கையை நட்டவன் வெறுங்கையுடன் செல்வான்” என்று சும்மாவா சொன்னாங்க…? ஆரோக்கியத்தை அள்ளி அள்ளி தரும் முருங்கை உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயமாக இந்த டேஸ்டான முருங்கைக்காய் டிக்கி ரெசிபியை டிரை பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு- 4
முருங்கைக்காய்- 3
கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள்- 1/4 தேக்கரண்டி
சோள மாவு- ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய்- 2
கறிவேப்பிலை- ஒரு கொத்து
எண்ணெய்- தேவைக்கேற்ப
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
* ஒரு குக்கரில் முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி இரண்டு விசில் வர விட்டு வேக வைத்து எடுக்கவும்.
* வேக வைத்த முருங்கைக்காயில் உள்ள சதையை மட்டும் தனியாக எடுத்து வையுங்கள்.
* இப்போது உருளைக்கிழங்கையும் குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
* வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
* இதனுடன் தனியாக எடுத்து வைத்த முருங்கைக்காய் சதை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசையவும்.
* இந்த கலவையுடன் கரம் மசாலா, சீரகத் தூள், சோள மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிசையவும்.
* பின்னர் இந்த கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து வடை போல தட்டவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வடையை போடவும்.
* எண்ணெய் மிதமான சூட்டில் இருத்தல் வேண்டும்.
* இருபுறமும் சிவந்து வந்தவுடன் எடுத்து விடலாம்.
* அவ்வளவு தான்… சுவையான முருங்கைக்காய் டிக்கி தயார்.
* மாலை நேரத்தில் சூடான டீயுடன் பரிமாறி குடும்பத்துடன் என்ஜாய் பண்ணுங்க.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.