இந்த மாதிரி இட்லி சாம்பார் செய்தா பத்து இட்லி கூட சாப்பிடலாம்!!!

தென்னிந்தியாவில் பிரபலமான உணவுகளில் ஒன்று இட்லியும், சாம்பாரும் தான். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. துளியும் எண்ணெய் இல்லாமல் இட்லி ஆவியில் வேக வைக்கப்படுவதால் அனைத்து வயதினருக்கும் எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

இட்லிக்கு பல வகையான சட்னி இருந்தாலும் , கமகமக்கும் சாம்பார் இருந்தால், 4 இட்லி சாப்பிடுபவர்கள் கூட 6 இட்லி சாப்பிடுவார்கள்.
வாங்க கமகமக்கும் மணத்துடன் எப்படி இட்லி சாம்பார் செய்வது என்று பார்ப்போம் .

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – 1/2 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 1(பெரியது)
சின்ன வெங்காயம் – 16
பூண்டு – 2 பற்கள்
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 1
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கேரட் – 1
பீன்ஸ் – 4
கத்தரிக்காய் – 1
முருங்கைக்காய் – 1
புளி – ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
*முதலில் ஒரு குக்கரில் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, பெரிய வெங்காயம் 1, தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மூன்று விசில் வைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* பீன்ஸ், கேரட், முருங்கைக்காய், கத்தரிக்காய் ஆகியவற்றை சிறு‌ துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

*பின்பு நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.

* பின்பு சாம்பார்தூள் சேர்த்து வதக்கி விட்டு தண்ணீர் சிறிதளவு ஊற்றி காய்கறிகளை வேக விடவும்.

*காய்கறிகள் வெந்தவுடன் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

* பிறகு புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* பின்பு சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

*இப்போது சுவையான கமகமக்கும் இட்லி சாம்பார் ‌தயார்.

*இந்த இட்லி சாம்பாரை சுடச்சுட இட்லியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

6 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

7 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

8 hours ago

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

8 hours ago

லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே

லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…

8 hours ago

நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே

கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…

10 hours ago

This website uses cookies.