வீட்டில் காய்கறிகள் இல்லாத நேரத்தில் உடனடியாக தயாராகும் இன்ஸ்டன்ட் கிள்ளி போட்ட சாம்பார் எப்படி செய்வது என பார்க்கலாம். இதனை பத்தே நிமிடத்தில் எளிதாக செய்து விடலாம். இந்த இன்ஸ்டன்ட் சாம்பார் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க….
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 150 கிராம் பூண்டு பல் – 4
பச்சை மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
சமையல் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறு துண்டு
வரமிளகாய் – 5
பெரிய வெங்காயம் – 2
கருவேப்பிலை – ஒரு கொத்து
தக்காளி – ஒன்று
புளி – சிறு எலுமிச்சை பழம் அளவு
செய்முறை:
*முதலில் ஊற வைத்த துவரம் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து, குக்கரில் போடவும்.
*இதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தக்காளி, உப்பு, பெருங்காயம் மற்றும் சிறிதளவு எண்ணெய் ஆகியவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
*பருப்பு வெந்ததும் அதனை மத்து போட்டு கடைந்து வையுங்கள்.
*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய விடவும்.
*இப்போது கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
*அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.
*தக்காளி குழைய வதங்கிய பின் மசித்து வைத்த பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
*சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
*ஒரு கொதி வந்தவுடன் புளி கரைசல் ஊற்றி இறக்கினால் சுவையான சாம்பார் தயார்.
*இந்த சாம்பார் சாதம், இட்லி, தோசை அனைத்திற்கும் அற்புதமாக இருக்கும்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.