தென் இந்தியர்களின் மதிய உணவானது ஒரு குழம்பு இல்லாமல் நிறைவடையாது. ஆனால் தினமும் என்ன குழம்பு வைக்கலாம் என்பதை யோசிப்பது மிகவும் கஷ்டம். ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக இருக்க வேண்டும், அதே சமயம் சுவையாகவும், அனைவருக்கும் பிடித்தமாதிரியும் இருக்க வேண்டும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது கறிவேப்பிலை வைத்து ஒரு மசாலா குழம்பு. இது சுவையாக இருப்பதோடு மட்டும் அல்லாமல், சருமம், தலைமுடி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு- ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு- ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு,
காய்ந்த மிளகாய் – 2
கடுகு- ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
புளி- எலுமிச்சை பழம் அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை – சிறிதளவு
செய்முறை:
*முதலில் கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து உலர வைக்கவும்.
*ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.
*எண்ணெய் காய்ந்ததும் உலர வைத்த கறிவேப்பிலை சேர்த்து வதக்கி தனியாக வையுங்கள்.
*அதே எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மிளகு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கறிவேப்பிலையோடு ஆற வையுங்கள்.
*நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.
*இதனோடு புளியையும் சேர்த்து அரைக்கவும்.
*அரைத்த கலவையை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குழம்பு போல கரைத்து வைக்கவும்.
*இப்போது கடாயில் உள்ள எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
*தாளித்த பின் நாம் கரைத்து வைத்த கலைவையை ஊறவைத்து கொதிக்க விடவும்.
*பச்சை வாசனை போனதும் அதில் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.