வேர்கடலையில் உடலுக்கு
ஆரோக்கியம் அளிக்கும் வைட்டமின்களும் ஊட்டச் சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. தக்காளி சட்னி, கார சட்னி, தேங்காய் சட்னி எனப் பல வகையான சட்னி வகைகள் உண்டு. ஆனால், ஆரோக்கியமும், சத்தும் நிறைந்த இந்த வேர்க்கடலை சட்னியை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – 1/2 கப்
சின்ன வெங்காயம் – 10
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 3
புளி – சிறிதளவு
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் – 1
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை:
* முதலில் அடுப்பில் வாணலியை வைத்து வேர்க்கடலையை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, வரமிளகாய், கறிவேப்பிலை நான்கு இலை சேர்த்து நன்கு வதக்கவும்.
*வதக்கிய அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
* பின்பு வேர்க்கடலை, தேங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
*அரைத்த வேர்க்கடலை சட்னியை ஒரு கிண்ணத்தில் ஊற்றவும்.
* அடுத்ததாக அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
*பிறகு அந்த தாளிப்பை வேர்க்கடலை சட்னியில் ஊற்றி பரிமாறவும்.
* இப்போது வேர்க்கடலை சட்னி தயார்.
* இந்த வேர்க்கடலை சட்னியை சுடச்சுட இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர்…
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
This website uses cookies.