பழங்காலத்தில் இருந்தே ஜவ்வரிசி என்பது பயன்பாட்டில் இருந்து வருகிறது. விரத நாட்களில் சோர்வை நீக்க ஜவ்வரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாம் ஜவ்வரிசி வைத்து வாயில் எச்சில் ஊற செய்யும் கேசரி எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி- 1 கப்
சர்க்கரை- 1 கப்
நெய்- 5 தேக்கரண்டி
ஏலக்காய் தூள்- 1/4 தேக்கரண்டி
குங்கும பூ- ஒரு சிட்டிகை
முந்திரி பருப்பு- 12
உப்பு- ஒரு சிட்டிகை
செய்முறை:
*முதலில் ஜவ்வரிசியை சுத்தம் செய்து விட்டு ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள்.
*ஒரு கப் சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
*குங்கும பூவை ஒரு ஸ்பூன் தண்ணீரில் ஊற வைக்கவும்.
*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு, முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
*அதே நெய்யில் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து ட்ரை ஆகும் வரை வறுத்து பின்னர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
*ஜவ்வரிசி வெந்ததும் அரைத்து வைத்த சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.
*அவ்வப்போது நெய் சேர்த்து கிளறுங்கள்.
*கடைசியில் குங்கும பூ, ஏலக்காய் தூள் மற்றும் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து கிளறினால் ஜவ்வரிசி கேசரி தயார்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான்…
மனநலம் பாதிக்கப்பட்டதா? “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “மாநகரம்” போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகர் ஸ்ரீ. “மாநகரம்” திரைப்படத்திற்குப் பிறகு…
விடாமுயற்சி படுதோல்விக்கு பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களுக்கு பயங்கர எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அதன்படியே ரசிகர்களுக்கு…
ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் 7 வயது மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில்…
வரிசையாக களமிறங்கும் சிம்பு “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு தான் தொடர்ந்து நடிக்கவுள்ள மூன்று திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
தேர்தலை சந்திக்கப்போகும் விஜய் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் ஜூன்…
This website uses cookies.