பேரீச்சம் பழம் மற்றும் கோதுமை சேர்த்து செய்யப்படும் இந்த அல்வா, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். வாங்க இந்த கோதுமை டேட்ஸ் அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பேரீச்சம் பழம் – 50(கிராம்)
கோதுமை – 1 கப்
பால் -1/4 லிட்டர்
சர்க்கரை – 400(கிராம்)
முந்திரி – 25(கிராம்)
நெய் – 150( கிராம்)
செய்முறை:
*முதலில் பேரீச்சை பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் சேர்த்து அடுப்பில் வைத்து வேகவிடவும்.
* இன்னொரு அடுப்பில் நெய் மற்றும் கோதுமை சேர்த்துத் தளர்ச்சியாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
* பிறகு சர்க்கரை மூழ்கும் வரை நீர் விட்டுக் கரைத்து பாகாகி வரும் போது , பாலோடு வெந்து திரண்டிருக்கும் பேரீச்சையை நன்கு மசித்து, சர்க்கரை பாகில் சேர்க்கவும்.
* பிறகு அதில், வறுத்த கோதுமை மாவு மற்றும் மீந்திருக்கும் நெய் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும்.
* நன்றாக நெய் பிரிந்து கரண்டியிலிருந்து வழுக்கி விழும் நிலையில் வந்தவுடன், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கி விடவும்.
* மிகவும் சுவையான, கமகமக்கும் கோதுமை பேரீச்சை அல்வா தயார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.