ஆரோக்கியம்

உலர்ந்த அத்திய இந்த மாதிரி சாப்பிட்டா  ஹெல்தியா மட்டுமில்ல ஃபிட்டாவும் இருக்கலாம்!!!

உலர்ந்த அத்திப்பழம் மற்றும் தண்ணீர் ஆகிய இரண்டுமே தனி தனியாக சாப்பிடும் பொழுது வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கின்றன. அதுவே இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து, உலர்ந்த அத்தியை தண்ணீரில் ஊற வைத்து பருகும் பொழுது வழக்கத்தை விட நமக்கு அதிக பலன்கள் கிடைக்கிறது. ஊற வைத்த உலர்ந்த அத்தி தண்ணீரில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது உடல் எடையை குறைக்க ஒரு அற்புதமான பானமாக அமைகிறது. மேலும் பொலிவான சருமத்திற்கும், ஆரோக்கியமான இதயத்திற்கும் இந்த பானத்தை நீங்கள் பருகலாம். செரிமானத்தை ஊக்குவித்து, ஆற்றலை அதிகரிக்கும் இந்த உலர்ந்த அத்தி தண்ணீரை குடிப்பதால் நமக்கு கிடைக்கும் பல்வேறு பலன்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதய ஆரோக்கியம் 

உலர்ந்த அத்தி தண்ணீரில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இது நம்முடைய இதயத்தை பாதுகாத்து அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் சத்தானது ரத்த அழுத்தத்தை சீராக்கி இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. எனவே இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு ஒருவர் தாராளமாக இந்த உலர்ந்த அத்தி தண்ணீரை பருகலாம்.

செரிமான ஆரோக்கியம்

செரிமான ஆரோக்கியத்திற்கு உலர்ந்த அத்தி தண்ணீர் ஒரு அற்புதமான பானமாக இருக்கிறது. இதில் உள்ள லாக்சேட்டிவ் பண்புகள் மலத்தை மென்மையாக்கி மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. அதிக நார்ச்சத்து இருப்பதன் காரணமாக இது நம்முடைய செரிமானம் சிறந்த முறையில் நடைபெறுவதற்கு உதவுகிறது. 

ஆற்றல் அதிகரிப்பு

பலவிதமான ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக அமையும் உலர்ந்த அத்தி தண்ணீரில் வைட்டமின் A, B வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், ஜிங்க், காப்பர், மாங்கனீசு மற்றும் இரும்பு சத்து போன்ற மினரல்களும் உள்ளன. இதனால் இது நம்முடைய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. உங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பையும், ஆற்றலையும் அதிகரிக்கிறது. 

இதையும் படிக்கலாமே: தீபாவளி ஸ்பெஷல்: கிரிஸ்பியா, டேஸ்டா சோமாஸ் செய்யறது நீங்க நினைக்குற மாதிரி அவ்வளவு கஷ்டமெல்லாம் இல்லைங்க…!!!

டயாபடீஸ்

நீரிழிவு நோய் இருப்பவர்கள் பொதுவாக ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட முடியும். அந்த பட்டியலில் உலர்ந்த அத்தி தண்ணீருக்கு நிச்சயமாக ஒரு இடம் உண்டு. நார்ச்சத்து அதிகம் நிறைந்த இந்த தண்ணீர் சர்க்கரை பொறுமையாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது. இதனால் ரத்த குளுக்கோஸ் அளவு சீராக பராமரிக்கப்படுகிறது. எனவே நீரழிவு நோயாளிகள் தங்களுடைய டயட்டில் உலர்ந்த அத்தி தண்ணீரை சேர்ப்பதன் மூலமாக பலன் பெறலாம்.

உடல் எடையை குறைக்க

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு உலர்ந்த அத்திப்பழ தண்ணீர் ஒரு சிறந்த கருவியாக அமைகிறது. இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இதனால் நீங்கள் அதிகப்படியாக உணவு சாப்பிடுவதை தவிர்க்கலாம். மேலும் கூடுதலாக இதில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பண்புகளும் காணப்படுவதால் உடல் எடை விரைவாக குறையும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரதமர் மோடி பதவி விலகல்? தேசிய களத்தில் சூடுபிடித்த முக்கிய கருத்து.. பாஜக நிலைப்பாடு என்ன?

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…

24 minutes ago

அக்கட தேசத்து நடிகையுடன் ஊர் சுற்றும் தனுஷ்.. வைரலாகும் வில்லங்கமான போட்டோஸ்!

பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…

47 minutes ago

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்- பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை போட்டுடைத்த உதவி இயக்குனர்

கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…

50 minutes ago

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

1 hour ago

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

2 hours ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

2 hours ago

This website uses cookies.