ஆரோக்கியம்

குளிர்காலத்தில் ஏற்படும் அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு சொல்யூஷன் போதும்!!!

பெட்ரோலியம் ஜெல்லி என்றாலே நம்முடைய ஞாபகத்திற்கு முதலில் வருவது கடினமான, வறட்சி நிறைந்த மாதங்கள் தான் முதலில் தோன்றுகிறது. பெட்ரோலியம் ஜெல்லி என்பது அரிப்பு மற்றும் வெள்ளை நிற திட்டுகளை எதிர்த்து போராடுவதற்கான சிறந்த தீர்வாக அமைகிறது. குளிர்காலம் என்பது சருமத்தில் பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். அவற்றில் தோலில் ஏற்படும் விரிசல்கள் மற்றும் வறட்சி போன்றவை அடங்கும். சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கவும், நீண்ட கால சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் பெட்ரோலியம் ஜெல்லி ஒரு நம்பகமான பதிலாக அமைகிறது. குளிர் காலத்தில் உங்களுடைய நெருங்கிய நண்பராக பெட்ரோலியம் ஜெல்லியை ஏன் கொண்டிருக்க வேண்டும் என்பதை பற்றி விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.

குளிர்காலத்தில் பெட்ரோலியம் ஜெல்லியின் நன்மைகள் 

பிரபலமாக பலரிடையே இருக்கும் நம்பிக்கைக்கு மாறாக பெட்ரோலியம் ஜெல்லி என்பது பல சரும பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமைகிறது. சருமத்தில் உள்ள டானை போக்கி, சோர்வாக இருக்கும் சருமத்தை ஆற்றுவதற்கு இது பயன்படுகிறது. சிறிய பட்ஜெட்டில் வறண்ட தோலை சமாளிப்பதற்கு பெட்ரோலியம் ஜெல்லி உதவுகிறது. பல தலைமுறைகளாக கடினமான மற்றும் விரிசல் நிறைந்த தோலை சரி செய்து அதற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குவதற்கு இது ஒரு அற்புதமான கருவி.

குளிர்காலத்தில் நம்முடைய தோலில் இருக்கும் ஈரப்பதம் அதிவிரைவாக குறையக்கூடும். பெட்ரோலியம் ஜெல்லி சருமத்தின் மேற்பரப்பை பாதுகாப்பதற்கான ஒரு அடுக்காக செயல்பட்டு, ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. அதிக வறட்சி நிறைந்த கைகள், முட்டி பகுதி, கால்கள் உதடுகள் போன்றவற்றில் நீங்கள் பெட்ரோலியம் ஜெல்லியை வழக்கமான முறையில் பயன்படுத்தினால் அந்த இடத்தில் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். மேலும் இது சருமத்தில் ஏற்படும் எரிச்சலையும் போக்குகிறது.

குளிர்காலத்தில் பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்துவது எப்படி?

சருமத்தை சுத்தம் செய்வதற்கு முதலில் நீங்கள் பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்த விரும்பும் இடத்தையோ அல்லது முகத்தையோ வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் கிளென்சர் பயன்படுத்தி சுத்தம் செய்யவும். பிறகு ஒரு துண்டு வைத்து தோலை ஒத்தி எடுக்கவும். அதில் லேசாக ஈரப்பதம் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். அதன் பிறகு பெட்ரோலியம் ஜெல்லியை தடவினால் ஈரப்பதம் தக்க வைக்கப்படும்.

ஒரு மெல்லிய அடுப்பை பயன்படுத்தவும்

ஒரு சிறிய அளவு பெட்ரோலியம் ஜெல்லியை எடுத்து அதனை உங்கள் விரல்களில் தடவி பின்னர் கூடுதல் ஈரப்பதம் தேவைப்படும் கைகள், முட்டி, கால்கள் அல்லது உதடுகளுக்கு பயன்படுத்தவும்.

இதையும் படிக்கலாமே: இஞ்சி டீ vs கிரீன் டீ: குளிர்காலத்திற்கு ஏற்றது எது???

ஆழமான ஈரப்பதத்திற்கு மூடி வைக்கவும் 

பெட்ரோலியம் ஜெல்லியை உங்களுடைய கைகள், கால்கள் போன்ற பகுதியில் தடவிய பிறகு தக்க வைப்பதற்கு சாக்ஸ் அல்லது கிளவுஸ் பயன்படுத்துங்கள். தேவைப்படும் போது மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும். ஒருவேளை நீங்கள் உங்கள் முகத்திற்கு பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்தி இருந்தால் ஒரு சாஃப்ட் கிளென்சர் அல்லது வைப்ஸ் பயன்படுத்தி சருமத்தை சுத்தமாக துடைத்து விடுங்கள் இது சரும துளைகளில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

12 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

13 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

13 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

13 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

13 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

13 hours ago

This website uses cookies.