அரிசியை வேக வைப்பதால் கிடைக்கும் கஞ்சி தண்ணீர் என்பது முழுக்க முழுக்க மாவுச்சத்து நிறைந்த ஒரு ஊட்டச்சத்து பொருள். கழிவாக நினைத்து சமையல் அறையில் இருந்து வெளியேற்றப்படும் இந்த கஞ்சி தண்ணீர் உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதில் கஞ்சி தண்ணீர் எப்படி உதவுகிறது என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
உங்களுடைய நாளை ஒரு டம்ளர் கஞ்சி தண்ணீருடன் வெறும் வயிற்றில் ஆரம்பிப்பது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் பல நன்மைகளை செய்யும். நாள் முழுவதும் பசியை கட்டுப்படுத்தி, அதன் மூலமாக நீங்கள் குறைவான கலோரிகளை எடுத்துக் கொள்வதற்கு இது உதவுகிறது.
உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு டம்ளர் கஞ்சி தண்ணீர் குடிப்பது நீங்கள் சாப்பிடும் உணவில் 10 முதல் 15 சதவீதத்தை குறைக்கும் என்று பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஞ்ச தண்ணீரில் குறைவான கலோரிகளும் அதிக நீர்ச்சத்தும் இருப்பதால் இது நம்முடைய ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலை குறைக்கிறது.
இதையும் படிக்கலாமே: உடலுக்கு வலு சேர்க்கும் கருப்பு கவுனி அரிசி கஞ்சி!!!
ஒருவேளை உங்களுக்கு இனிப்புகள் மிகவும் பிடிக்கும் என்றால் ஆரோக்கியமான ஸ்மூத்தி செய்வதற்கு ஒரு பேசாக இந்த கஞ்சி தண்ணீரை நீங்கள் பயன்படுத்தலாம். ஸ்மூத்திக்கு பதிலாக கஞ்சி தண்ணீரை பயன்படுத்துவது உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல் உங்களுடைய உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் இது உதவுகிறது. இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வில் பங்கேற்ற நபர்கள் 6 மாதங்களுக்கு கஞ்சி தண்ணீர் பருகி வந்ததன் விளைவாக அவர்களுடைய உடல் எடையில் 5 முதல் 10 சதவீதத்தை இழந்தனர்.
சூப் செய்யும் பொழுது இந்த கஞ்சி தண்ணீரை நீங்கள் பேசாக பயன்படுத்தலாம். சூப் பொதுவாக பசியை அதிகரித்து, நீங்கள் சாப்பிடும் கலோரிகளின் அளவை 20% குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது உடல் எடையை குறைப்பதற்கு ஒரு அற்புதமான யுக்தியாக அமைகிறது.
கிரீன் டீ நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் என்பதை நாம் அறிவோம். இதோடு அரிசி தண்ணீரை சேர்ப்பது உடல் எடையை குறைப்பதற்கு உதவியாக இருக்கும். மிதமான உடற்பயிற்சியின் போது கொழுப்பு ஆக்ஸிடேஷனை அதிகரித்து உடல் எடை குறைப்பதை 17 சதவீதம் மேம்படுத்துவதற்கு உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.