பல வீடுகளில் இரவு உணவுக்குப் பிறகு, ஒரு நடைபயிற்சிக்கு செல்வது ஒரு வழக்கமாக உள்ளது. பலர் மதிய உணவுக்குப் பிறகும் நடக்கிறார்கள். இது செரிமானத்தை மேம்படுத்த உதவும் என்பது நம்பப்படுகிறது. ஆனால், சாப்பிட்ட பிறகு நடப்பது உண்மையில் செரிமானத்திற்கு நன்மை பயக்குமா?
உங்கள் உணவை முடித்த பிறகு, உங்கள் உடல் வேலை செய்யத் தொடங்குகிறது. உணவை உடைத்து உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது. செரிமானத்தின் குறிப்பிடத்தக்க பகுதி சிறுகுடலில் நடைபெறுகிறது. உணவுக்குப் பிறகு நடப்பது வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு விரைவாக உணவுப் பரிமாற்றத்திற்கு உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
நம் வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு உணவு எவ்வளவு வேகமாக செல்கிறதோ, அந்த அளவு வீக்கம், வாயு மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும். இதனால் குடல் செயல்பாடு மேம்படலாம் மற்றும் மலச்சிக்கல் உண்டாவதற்கான வாய்ப்புகள் குறையலாம்.
உணவுக்குப் பிறது நடப்பது செரிமானத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், வகை-2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நம் உடலானது உணவை குளுக்கோஸாக மாற்றுகிறது. இது உடலுக்கு ஆற்றலின் முக்கிய ஆதாரமாகும்.
சாப்பிட்ட பிறகு, இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த அதிகரிப்பைச் சமாளிக்க, உடல் இன்சுலின் சுரக்கிறது. இது குளுக்கோஸை செல்களுக்குள் செலுத்த உதவுகிறது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகளுக்கு, இன்சுலின் செயல்பாடு பலவீனமடைகிறது. இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கும் செயல்முறையைத் தடுக்கிறது.
இது இரத்தத்தில் குளுக்கோஸின் அதிக அளவுகளுக்கு வழிவகுக்கும். மேலும் உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும். உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது, உடலானது குளுக்கோஸை ஆற்றலை உற்பத்தி செய்ய பயன்படுத்துகிறது. இது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் குறைக்க உதவுகிறது.
சாப்பிட்ட உடனேயே நடப்பது அசிடிட்டி மற்றும் உங்கள் வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும். உங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு 30-45 நிமிட இடைவெளிக்குப் பிறகு நடப்பது அதிக நன்மைகளைத் தரும்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.