உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது செரிமானத்திற்கு உதவுமா…???

பல வீடுகளில் இரவு உணவுக்குப் பிறகு, ஒரு நடைபயிற்சிக்கு செல்வது ஒரு வழக்கமாக உள்ளது. பலர் மதிய உணவுக்குப் பிறகும் நடக்கிறார்கள். இது செரிமானத்தை மேம்படுத்த உதவும் என்பது நம்பப்படுகிறது. ஆனால், சாப்பிட்ட பிறகு நடப்பது உண்மையில் செரிமானத்திற்கு நன்மை பயக்குமா?

உங்கள் உணவை முடித்த பிறகு, உங்கள் உடல் வேலை செய்யத் தொடங்குகிறது. உணவை உடைத்து உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது. செரிமானத்தின் குறிப்பிடத்தக்க பகுதி சிறுகுடலில் நடைபெறுகிறது. உணவுக்குப் பிறகு நடப்பது வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு விரைவாக உணவுப் பரிமாற்றத்திற்கு உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

நம் வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு உணவு எவ்வளவு வேகமாக செல்கிறதோ, அந்த அளவு வீக்கம், வாயு மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும். இதனால் குடல் செயல்பாடு மேம்படலாம் மற்றும் மலச்சிக்கல் உண்டாவதற்கான வாய்ப்புகள் குறையலாம்.

உணவுக்குப் பிறது நடப்பது செரிமானத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், வகை-2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நம் உடலானது உணவை குளுக்கோஸாக மாற்றுகிறது. இது உடலுக்கு ஆற்றலின் முக்கிய ஆதாரமாகும்.
சாப்பிட்ட பிறகு, இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த அதிகரிப்பைச் சமாளிக்க, உடல் இன்சுலின் சுரக்கிறது. இது குளுக்கோஸை செல்களுக்குள் செலுத்த உதவுகிறது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகளுக்கு, இன்சுலின் செயல்பாடு பலவீனமடைகிறது. இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கும் செயல்முறையைத் தடுக்கிறது.

இது இரத்தத்தில் குளுக்கோஸின் அதிக அளவுகளுக்கு வழிவகுக்கும். மேலும் உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும். உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது, உடலானது ​​குளுக்கோஸை ஆற்றலை உற்பத்தி செய்ய பயன்படுத்துகிறது. இது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் குறைக்க உதவுகிறது.

சாப்பிட்ட உடனேயே நடப்பது அசிடிட்டி மற்றும் உங்கள் வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும். உங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு 30-45 நிமிட இடைவெளிக்குப் பிறகு நடப்பது அதிக நன்மைகளைத் தரும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

1 hour ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

2 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

3 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

3 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

3 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

4 hours ago

This website uses cookies.