காய்ச்சல் இருக்கும் போது அஸ்வகந்தா சாப்பிடக்கூடாதுன்னு சொல்ல காரணம் இதுதான்!!!

அஸ்வகந்தா என்பது ஒரு
சிறந்த ஆயுர்வேத தீர்வாகும். அதன் பரவலான நன்மைகள் காரணமாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இது மற்ற மூலிகைகளுடன் கலக்கப்படுகிறது அல்லது தனிநபரின் உடல்நிலையைப் பொறுத்து எடுக்கப்படுகிறது. இதனை மாத்திரைகள் அல்லது தூள் வடிவில் உட்கொள்ளலாம். உலகமே ஒரு தொற்று வைரஸ் நோயால் தத்தளித்துக் கொண்டிருக்கும் தற்போதைய நேரத்தில், இந்த ஆயுர்வேத மருந்தின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய ஆபத்தை குறைப்பதற்கு பயன்படுகிறது. அஸ்வகந்தா சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது என்றாலும் சில சந்தர்ப்பங்களில் அதைத் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சலால் அவதிப்படும் போது:
காய்ச்சலால் அவதிப்படும் போது அஸ்வகந்தா சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதில் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் இம்யூனோமோடூலேட்டரி பண்புகளை செலுத்தும் பல உயிர்வேதியியல் கலவைகள் உள்ளன. சளி, காய்ச்சல் போன்ற நோய்களை உண்டாக்கும் நோய்க்கிருமிகளைத் தடுப்பதில் இது நன்மை பயக்கும். ஆனால் உங்களுக்கு ஏற்கனவே அதிக வெப்பநிலை இருக்கும்போது இந்த ஆயுர்வேத மூலிகையை தவிர்க்கவும். ஏனெனில் இது ஜீரணிக்க கடினமாக இருக்கும். காய்ச்சல் உங்களை பலவீனமாக்குகிறது மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் சீர்குலைக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் அஸ்வகந்தாவை எடுத்துக் கொண்டால், உங்கள் வயிற்றில் அதை ஜீரணிக்க முடியாமல் போகலாம் மற்றும் வயிற்றுப்போக்கு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளால் நீங்கள் பாதிக்கப்படலாம்.

அஸ்வகந்தாவை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்:
அஸ்வகந்தா ஒரு சக்திவாய்ந்த மூலிகை மற்றும் அதன் அதிகப்படியான அளவு சில தீவிர பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஆயுர்வேத மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட அல்லது தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அளவில் அஸ்வகந்தாவை எடுத்துக்கொள்ள எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக உட்கொள்வது வயிற்று வலி, வயிற்றுப்போக்கு அல்லது வாந்திக்கு வழிவகுக்கும். மேலும், அஸ்வகந்தாவை நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொண்டால், கல்லீரல் பிரச்சனைகள் ஏற்படலாம்.

இது அனைவருக்கும் பாதுகாப்பானது என்றாலும், நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ, தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தாலோ அல்லது நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகள், மயக்க மருந்துகள், ஆண்டிடிரஸன்ட்கள் அல்லது நாட்பட்ட நோய்க்கான பிற மருந்துகளை எடுத்துக் கொண்டாலோ அதை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

எவ்வளவு அஸ்வகந்தா எடுப்பது பாதுகாப்பானது?
அஸ்வகந்தாவுக்கு நிலையான டோஸ் எதுவும் இல்லை. இது முழுக்க முழுக்க உங்கள் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி நிலை சார்ந்தது. ஆனால் ஆய்வுகளின்படி, மூலிகையின் பாதுகாப்பான டோஸ் 125 மிகி முதல் 5 கிராம் வரை இருக்கும். இது ஒரு நாளைக்கு 2-4 அளவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அஸ்வகந்தாவை எடுக்க சரியான நேரம்:
காலையிலோ மாலையிலோ சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வது நல்லது. நீங்கள் அதை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது லேசான அசௌகரியத்தை ஏற்படுத்தும். அப்படியானால், காலை உணவுக்குப் பிறகு அல்லது சிறிய சிற்றுண்டிக்குப் பிறகு அல்லது இரவில் எடுத்துக் கொள்ளுங்கள். இரவில் சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வது உங்களுக்கு ஓய்வெடுக்கவும் மற்றும் நன்றாக தூங்கவும் உதவும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கோர்ட்டை சீமான் மதிப்பதே இல்லை.. பாட்டெழுதவும், படம் பார்க்க மட்டும் போவாரா? நீதிபதி ஆட்சேபம்!

திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…

5 minutes ago

பெட்ரோல் விலையும் உயருமா? கலால் வரி உயர்வு : மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…

1 hour ago

கமிஷ்னர் சென்ற கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. பரபரப்பு : விசாரணையில் இறங்கிய புலனாய்வு!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…

2 hours ago

இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் : சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…

3 hours ago

திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ

எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

3 hours ago

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?

அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…

4 hours ago

This website uses cookies.