பச்சரிசி, வெல்லம் மற்றும் பருப்பு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் சர்க்கரை பொங்கல் தைத்திருநாளின் ஹீரோ ஆகும். பல்வேறு விசேஷ நாட்களில் சர்க்கரை பொங்கல் செய்தாலும் தைத்திருநாள் அன்று செய்யப்படும் சர்க்கரை பொங்கலுக்கு தனிச்சிறப்பு இருக்கிறது. தைத்திருநாள் அன்று காலை சர்க்கரை பொங்கல் செய்து சூரிய பகவானுக்கு படைப்பது வழக்கம்.
நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும் பொங்கலில் சர்க்கரை பொங்கல் சாப்பிடாமல் தவிர்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான். நீரிழிவு நோயாளிகள் வீட்டில் இருந்தால், அவர்கள் சர்க்கரை பொங்கல் சாப்பிடலாமா கூடாதா என்ற கேள்வி உங்கள் மனதில் இருக்கலாம்.
ஆகவே சர்க்கரை பொங்கலில் நாம் என்னென்ன பொருட்களை சேர்க்கிறோம், அதிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இதன் மூலம் சர்க்கரை பொங்கல் நம் உடம்புக்கு நல்லதா இல்லையா என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம்.
சர்க்கரை பொங்கலில் சேர்க்கப்படும் பாசிப்பருப்பில் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் சருமத்தை பாதுகாக்கும். பாசிப்பருப்பு கெட்ட கொழுப்பை கரைத்து இதயத்தை பார்த்து கொள்ளும். மேலும் இதிலுள்ள நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.
பொங்கல் பச்சரிசி கொண்டு செய்ப்படுவதால் அதன் மூலம் ஏராளமான கார்போஹைட்ரேட் கிடைக்கும். இது உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கும். பச்சரிசியில் நார்ச்சத்து குறைவாக உள்ளதால், வயிற்று போக்கு பிரச்சினை உள்ளவர்களுக்கு இது சிறந்தது. மேலும் இதில் அதிக அளவில் கிளைசீமிக் குறியீடு இருப்பதால் நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு இது உகந்தது அல்ல.
அடுத்தபடியாக வெல்லம். என்ன தான் வெல்லம் வெள்ளை சர்க்கரையைக் காட்டிலும் உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும், அதனை குறைவான அளவிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் வெல்லத்தை குறைவான அளவில் சாப்பிட வேண்டும். ஆகவே இறுதியில் நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் வேறு சில உடல்நிலை பிரச்சினை உள்ளவர்கள் சர்க்கரை பொங்ஙலை அறவே ஒதுக்காமல் சிறிதளவு சாப்பிடலாம்.
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
This website uses cookies.