தற்போதைய நிலவரப்படி, பிளாஸ்டிக் இல்லாத வீடே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு பெரும்பாலான வீடுகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் குறைவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக அதனை அதிக அளவில் வாங்கி நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் அதனால் விளையும் தீங்குகள் ஏராளம். காசு கொடுத்து நோயை வாங்குவது என்பதற்கு பிளாஸ்டிக் சிறப்பாக பொருந்தும்.
இந்த பிளாஸ்டிக் பொருட்களை அன்றாடம் பயன்படுத்துவதால், கடுமையான நோய்கள் பரவிகிறது. 100க்கு 80 பேர் தங்கள் வீடுகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துகின்றனர்.
பிஸ்பெனால் ஏ (பிபிஏ) எனப்படும் ரசாயன கலவை பிளாஸ்டிக் பாட்டில்களை தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. பாலிகார்பனேட் பிளாஸ்டிக் தயாரிக்க BPA பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன்பாடு புற்றுநோய் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
இது போன்ற நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்க இன்றே உங்கள் வீட்டிலிருந்து பிளாஸ்டிக் பாட்டில்களை தூக்கி எறியுங்கள். பிளாஸ்டிக் பாட்டில்களைப் போலவே, பிஸ்பெனால் ஏ (பிபிஏ) வீட்டிலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கொள்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், அதில் நாம் சேமித்து வைத்திருக்கும் பொருட்களின் மீது பிளாஸ்டிக் அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே பிளாஸ்டிக் டப்பாக்களுக்கு பதிலாக இரும்பு அல்லது கண்ணாடி ஜார்களை பயன்படுத்த வேண்டும்.
உங்கள் வீட்டில் காய்கறிகளை வெட்டுவதற்கு பிளாஸ்டிக் சாப்பிங் போர்டு பயன்படுத்தினால், அதை இன்றே நிறுத்துங்கள். உண்மையில், பிளாஸ்டிக் சாப்பிங் போர்டில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் கூறுகள் உணவில் கலக்கின்றன. இதனால் நோய்கள் பரவுகின்றன. இது தவிர, சில பாக்டீரியாக்கள் காலப்போக்கில் வளர ஆரம்பிக்கின்றன. இது வயிறு தொடர்பான நோய்களை அதிகரிக்கிறது. அதற்கு பதிலாக ஒரு மரம் அல்லது கல் பலகையை பயன்படுத்தவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.