உணவின் நிறம் என்பது பார்ப்பவரை கவர்ந்து இழுத்து, அதனை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டக்கூடிய ஒரு முக்கியமான பொருள்தான். ஆனால் அது இயற்கையான நிறமாக இருந்து விட்டால் பிரச்சனை இல்லை. அதை செயற்கையாக உருவாக்கும் பொழுது ஏராளமான பிரச்சனைகள் எழுகிறது. இது தற்போது ஒரு முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
பெரும்பாலும் குளிர் பானங்கள், சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம்கள், கேக்குகள், கெலாக்ஸ், ஓட்ஸ் போன்ற காலை உணவு தானியங்களில் செயற்கை நிறம் பயன்படுத்தப்படுகிறது. பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் மோல்டு போன்றவை வளராமல் தடுக்கவும், உணவு நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கவும் சேர்க்கப்படும் கெமிக்கல்களே பிரிசர்வேட்டிவ்கள் ஆகும்.
மிதமான அளவுகளில் பயன்படுத்தப்படும் பொழுது ரிசர்வேட்டிர்கள் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் அதனை அதிகமாக பயன்படுத்தும் பொழுது ஏராளமான நோய்களுக்கு வழிவகுக்கிறது. என்னதான் லேபிளில் இந்தந்த பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், 60% -ற்கும் அதிகமான பானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள லேபிளில் இருக்கக்கூடிய விஷயங்கள் முழுமையாக பின்பற்றப்படுவதில்லை.
டெசர்ட்கள், பியர், சாஃப்ட் ட்ரிங்க்ஸ், ஜாம், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், உறைய வைக்கப்பட்ட பால் சார்ந்த பொருட்கள் மற்றும் சுவையூட்டப்பட்ட சிரப்புகள் போன்ற உணவுகளில் எரித்ரோசைன், அலூறா ரெட், டார்டிராசின், சன்செட் எல்லோ, பிரில்லியன்ட் ப்ளூ மற்றும் இண்டிகோ கார்மைன் போன்ற செயற்கை நிறங்கள் சேர்க்கப்படுகிறது.
எந்த ஒரு பொருளையும் அதிகப்படியாக பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. அந்த வகையில் செயற்கை நிறங்களை அதிக அளவில் பயன்படுத்துவது புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் பல்வேறு அலர்ஜிகள் உட்பட இன்னும் எக்கச்சக்கமான நோய்களுக்கு வழி வகுக்கிறது.
அடுத்தபடியாக, உணவு கெட்டுப் போகாமல் இருப்பதற்கு பிரிசர்வேட்டிவ்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவை வயிற்று வலி, வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் சருமத்தில் தடிப்புகள் போன்றவற்றை ஏற்பட பல வாய்ப்புகள் உள்ளது. ஆகவே முடிந்தவரை பிரிசர்வேட்டிவ்கள் மற்றும் செயற்கை நிறங்கள் சேர்க்கப்படாத உணவுகளை சாப்பிடுங்கள். இதுவே நம் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள நாம் எடுக்கக்கூடிய மிக முக்கியமான முயற்சியாகும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
This website uses cookies.