ஆரோக்கியம்

டெய்லி உண்டாகுற ஸ்ட்ரெஸ் குறைக்க இத விட ஈசியான வழி இருக்கவே முடியாது!!!

மன அழுத்தம் என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அழையா பிருந்தாளியாக மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் “மன அழுத்தம்” என்ற வார்த்தையை அடிக்கடி கேட்க வேண்டிய நிலை உள்ளது. ஒருவருடைய வயது அல்லது பேக்ரவுண்ட் எதுவாக இருந்தாலும் பல்வேறு காரணங்களால் அனைவருமே ஏதோ ஒரு வித மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். வாழ்க்கையில் ஏற்படும் சவால்கள், பணி அழுத்தம் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் இந்த மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கிறது. இதனை நிர்வகிக்காமல் அப்படியே விட்டு விட்டால் நாள்பட்ட மன அழுத்தம் மோசமான சூழ்நிலைகளை ஏற்படுத்துகிறது. உதாரணமாக இதனால் பதட்டம், மனசோர்வு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, இதய நோய் போன்ற அபாயங்கள் ஏற்படலாம்.

நாள்பட்ட மன அழுத்தம் என்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் மனநலனையும் தாக்குகிறது. இதனால் உறவுகள் மற்றும் நம்முடைய வாழ்க்கையின் தரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே தினசரி வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை குறைப்பதற்கான சில எளிமையான மற்றும் பயனுள்ள வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாசிட்டிவாக இருக்கவும்

பாசிட்டிவான மனநிலையை கொண்டிருப்பது என்பது மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஒரு வலிமையான கருவி. எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவற்றில் கவனம் செலுத்தி, உங்களுடைய மனதை அமைதிப்படுத்துங்கள். பாசிட்டிவாக இருப்பதன் மூலமாக உங்களால் எந்த ஒரு சவாலையும் எளிமையாக சமாளிக்க முடியும். மேலும் இதனால் மன நிம்மதியோடு, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழலாம்.

மனதிற்கு ஓய்வு தரும் நுட்பங்கள் 

மனதை அமைதிப்படுத்துவதற்கு உதவும் ஒரு சில உடற்பயிற்சிகளை செய்வது மன அழுத்தத்தை குறைப்பதற்கான நுட்பம். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, தசைகளை அமைதிப்படுத்துவது, தியானம் போன்றவை மனதையும் உடலையும் அமைதிப்படுத்தி டென்ஷன் மற்றும் பதட்டத்தை போக்கும். தினமும் இதனை செய்யும் பொழுது உங்களுடைய உணர்வுகள் சீராக்கப்பட்டு, இதயத்துடிப்பு குறைந்து, மன அழுத்தம் இல்லாத நிலைக்கு செல்வீர்கள்.

பிறரோடு நேரம் கழித்தல்

பிறரோடு நேரத்தை செலவு செய்வது என்பது மன அழுத்தத்தை குறைப்பதற்கு பயனுள்ள மற்றுமொரு யுக்தி. அது குடும்பமாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி, ஒன்றாக இருக்கும் பொழுது உங்களை மறந்து மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். எப்பொழுதும் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். இது வித்தியாசமான யோசனைகளை ஏற்படுத்தி, உங்களை அளவுக்கு அதிகமாக சிந்திக்க வைக்கும். இதனால் மன அழுத்தம் அதிகமாகும்.

டைரி எழுதும் பழக்கம்

தினமும் நடக்கக்கூடிய விஷயங்களை ஒரு டைரியில் எழுதுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய யோசனைகள், உணர்வுகள் ஆகியவற்றை எழுதுவது உங்கள் மனதில் இருக்கும் அனைத்தையும் அவிழ்த்து விடுவதற்கு உதவும். இதனால் உங்கள் உடல் மற்றும் மனது அமைதி பெறும்.

இதையும் படிச்சு பாருங்க:  HMPV கொரோனா வைரஸ் போன்றதா… இது பரவுமா… அனைத்து கேள்விகளுக்கான பதில் இதோ!!!

எச்சரிக்கையாக இருப்பது 

எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து நிதானமாக செயல்படுவது மன அழுத்தத்தை குறைக்கும். வாழ்க்கையின் இந்த தருணத்தில் கவனம் செலுத்தி, கடந்த கால கஷ்டங்களை மறந்து விடுங்கள். அதே நேரத்தில் உங்கள் எதிர்காலத்தை பற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். உங்களுடைய மூச்சு, உடல் மற்றும் சுற்றுச்சூழலை கூர்ந்து கவனித்து, அமைதியையும் தெளிவையும் பெறுங்கள். இதனை பின்பற்றுவது உங்கள் மனதை அமைதிப்படுத்தி உடலை ஆற்றும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

11 hours ago

This website uses cookies.