கண்ணாடியை தூக்கி எறிந்து தெளிவான பார்வையைப் பெற நீங்க செய்ய வேண்டியது!!!

இன்றைய காலகட்டத்தில் பலரின் வேலை லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களில் இருப்பது கண்களுக்கு பெரிய ஆபத்தாக ஆமைகிறது. சிறு வயதிலேயே கண்ணாடி அணிவதற்கான கட்டாயத்தை இது ஏற்படுத்துகிறது. எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் நீல ஒளி நம் கண்களுக்கு சேதம் விளைவிப்பது மட்டுமல்லாமல், நமது தூக்க முறையை குழப்பி உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

எல்லா ஊட்டச்சத்தும் நிறைந்த உணவுகளை சாப்பிடாமை முதல் குறைந்த உடல் உழைப்பு வரை நமது பார்வைக் குறைபாட்டிற்கான காரணமாக பல இருக்கலாம்.
அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஒருவர் தனது பார்வையை எவ்வாறு மேம்படுத்தலாம். அது குறித்து இப்போது பார்ப்போம்.

சமச்சீரான மற்றும் ஆரோக்கியமான உணவை எடுப்பது ஒவ்வொரு அம்சத்திலும் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இயற்கையான மற்றும் வண்ணமயமான உணவு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவுகிறது. இது நமது கண்பார்வையைப் பாதுகாக்கும் ஒரு இயற்கை வழியும் கூட.

இந்தப் பட்டியலில் அடுத்தது உடற்பயிற்சி! நம்பமுடியாததாகத் தோன்றினாலும், உடற்பயிற்சி நீண்ட காலத்திற்கு நம் கண்பார்வையைப் பாதுகாக்க உதவும் என்பது உண்மைதான். வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் சமாளிப்பது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். தினசரி ஒரு 15 நிமிட உடற்பயிற்சி கூட பல உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க உதவும். அதில் ஒருவர் நல்ல நேரத்தை செலவழித்தால், அவர்களின் கைகளில் ஒட்டுமொத்த ஆரோக்கிய தீர்வு இருக்கும்.

20-20-20 விதியைப் பின்பற்றுவது நம் கண்பார்வைக்கு உதவும் மற்றொரு பயனுள்ள வழியாகும். மற்ற விதிகளைப் பின்பற்றக்கூடிய அல்லது பின்பற்ற முடியாத அனைவருக்கும், இந்த தந்திரம் ஒரு வழிக்கு உதவும். ஒருவர் வேலையை விட்டுவிடவோ அல்லது ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் நீண்ட இடைவெளி எடுக்கவோ முடியாது. ஏனெனில், அவர்களின் பணிச்சுமை அனுமதிக்காது. இந்த சூழ்நிலையில் 20-20-20 விதியை பின்பற்றவும். அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், கணினியிலிருந்து வெளியேறி, 20 அடி தொலைவில் உள்ள வேறு எதையாவது குறைந்தது 20 வினாடிகளுக்குப் பாருங்கள்.

கரோட்டினாய்டு சார்ந்த உணவுகளை உட்கொள்வதும் நம் கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது. கரோட்டினாய்டுகள், டெட்ராடெர்பெனாய்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு கரிம நிறமிகள். அவை தாவரங்கள் மற்றும் பாசிகள், அத்துடன் பல பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது பல இலை கீரைகள், காய்கறிகள் மற்றும் முட்டைகளில் கூட காணப்படுகிறது.
கரோட்டினாய்டுகள் நிறமி அடர்த்தி மற்றும் கண்களைச் சுற்றிலும் நிறமாற்றத்தையும் மேம்படுத்துகின்றன.

கண்ணாடிகள்
கடைசியாக, லேப்டாப் அல்லது ஏதேனும் எலக்ட்ரானிக் சாதனத்தில் பணிபுரியும் போது பாதுகாப்பு கண்ணாடிகளை அணிவது, தீங்கு விளைவிக்கும் நீல ஒளியில் இருந்து நம் பார்வையைப் பாதுகாக்க உதவும். அதுமட்டுமின்றி வெளியில் சன்கிளாஸ் அணிவது சூரியனில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் UVA மற்றும் UVB கதிர்வீச்சிலிருந்து கண்களைப் பாதுகாக்க உதவும். இது கண் பாதிப்பையும் தடுக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

6 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

6 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

7 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

8 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

9 hours ago

This website uses cookies.