தாய்ப்பால் அதிகரிக்கும் இஞ்சி-பூண்டு சூப் ரெசிபி!!!

“இதை சாப்பிடு, இதை சாப்பிடாதே; இதைச் செய், இதை சாப்பிடாதே!” என்று ஒரு பாலூட்டும் தாய்க்கு பல ரூல்ஸ் உண்டு. அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது மற்றும் தாய்ப்பாலை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றிய ஆலோசனைகளை பலர் வழங்குகின்றனர்.

தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்களானால், இஞ்சி-பூண்டு ரசம் உங்களுக்கான சரியான உணவு.

ரசம் என்பது ஒரு தென்னிந்திய சூப் ஆகும். இது மசாலாப் பொருட்களின் கலவையாகும். இது மருத்துவ மதிப்பை கொண்டுள்ளது. ஒரு பாலூட்டும் தாய்க்கு ஏற்ற செய்முறை இது. ஏனெனில் இது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும்.

பூண்டு ஒரு கேலக்டோகேஜ் உணவு மற்றும் பல ஆண்டுகளாக, இது தாய் பால் உற்பத்தியைத் தூண்டவும், தாய்ப்பாலின் விநியோகத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

கேலக்டோகோகுகள் பற்றி தெரியாதவர்களுக்கு இது போதுமான பால் உற்பத்தியைத் தொடங்குவதற்கும் பராமரிப்பதற்கும் உதவுகின்றன. பூண்டு, ஒரு சிறந்த கேலக்டோகோக்ஸாக கருதப்படுகிறது.

பூண்டில் உள்ள வாசனை தாய்ப்பாலுக்கு பரவுகிறது. மேலும் இது குழந்தை உறிஞ்சும் நேரத்தை கடுமையாக அதிகரிக்கிறது. இது நீண்ட காலத்திற்கு தாய்ப்பால் கொடுக்கும் குழந்தையின் உணவுத் தேர்வுகளை மேம்படுத்தலாம்.

பால் விநியோகத்தை அதிகரிக்க உதவும் ஒரு பானம் தவிர, ரசத்தின் பிற நன்மைகள் சிறந்த செரிமானம், சளி மற்றும் இருமல் சிகிச்சை, மேம்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எடை இழப்பு ஆகியவையும் அடங்கும்! இத்தகைய நன்மைகள் வாய்ந்த இஞ்சி-பூண்டு ரசம் செய்முறையை தெரிந்து கொள்வோம்.

தாய்ப்பாலை அதிகரிக்க உதவும் பூண்டு-இஞ்சி ரசம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
தக்காளி- 1
புளி தண்ணீர்- 1 கப்
இஞ்சி-பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு- 2 தேக்கரண்டி
தேவையான அளவு உப்பு
கருப்பு மிளகு, சீரகப் பொடி- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
எண்ணெய்/நெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
சிவப்பு மிளகாய்- சுவைக்கு ஏற்ப 1 அல்லது 2.
அழகுபடுத்த கொத்தமல்லி இலைகள்

செய்முறை:
*துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
*தக்காளியை பொடியாக நறுக்கி அரைத்து கொள்ளவும்.
*இஞ்சி பூண்டு விழுது, மிளகு சீரகத் தூள் மற்றும் துவரம்பருப்பு சேர்த்து நன்றாக விழுதாக அரைக்கவும்.
*ஒரு கடாயை எடுத்து, நறுக்கிய தக்காளி துண்டுகள், புளி தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். இதனை கொதிக்க வைக்கவும்
*அதில் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை 7-10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
*சுவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
*மற்றொரு கடாயில், எண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், சிவப்பு மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
*ரசத்தை வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
*ரசம் இப்போது சூடாக பரிமாற தயாராக உள்ளது

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…

9 hours ago

தறிகெட்டு ஓடும் ‘டிராகன்’…மொத்த வசூல் இத்தனை கோடியா.!

காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…

9 hours ago

டி.ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு…ஆளே அடையாளம் தெரியல..வைரலாகும் போட்டோ.!

டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…

10 hours ago

வெறி நாய் கடிக்கு சிகிச்சை எடுத்த இளைஞர் உயிரை மாய்த்த சோகம் : கோவை அரசு மருத்துவமனையில் ஷாக்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…

11 hours ago

பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் ரெடி மாமே…வெளிவந்த குட் ‘பேட் அக்லி’ அப்டேட்.!

பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…

11 hours ago

விஜய்யிடம் பேசுவது இல்லை.. அவர் படத்தை பார்ப்பதும் இல்லை : பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்!

நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…

12 hours ago

This website uses cookies.