தலைவலி என்பது அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. இது மன அழுத்தம் முதல் பல்வேறு மருத்துவ நிலைகளின் காரணமாக ஏற்படலாம். ஆனால் தலைவலி கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் காரணமாகவும் வரலாம். கண் தொடர்பான பிரச்சனைகளின் பொழுது எப்போது தலைவலி ஏற்படும் என்பதை புரிந்து கொள்வது பிரச்சினையை கண்டறிவதற்கும், அதற்கான சிகிச்சையை பெறுவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
தலைவலி மற்றும் கண் பிரச்சனைகளுக்கு இடையே உள்ள தொடர்பை புரிந்து கொள்ளுதல்
கண்கள் என்பது நாள் முழுவதும் அயராது வேலை செய்யக்கூடிய சிக்கலான உறுப்புகள். அவற்றுக்கு அளவுக்கு அதிகமாக அழுத்தம் கொடுத்தாலோ அல்லது வேறு சில பிரச்சனைகளின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தாலோ அதனால் தலைவலி மற்றும் அசௌகரியம் ஏற்படலாம். இது ஆக்குலர் தலைவலி என்று அழைக்கப்படுகிறது. இது பிறவகையான தலைவலிகளை விட சற்று வேறுபட்டதாக இருக்கும்.
தலைவலியை ஏற்படுத்தும் பொதுவான கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
கண்களில் அழுத்தம்
நீண்ட நேரத்திற்கு டிஜிட்டல் ஸ்கிரீன்களை பயன்படுத்துவது, படிப்பது அல்லது வாகனம் ஓட்டுவது போன்றவை கண்களின் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் நெற்றி, கண் பகுதிகளை சுற்றி வலி உண்டாகும்.
பார்வைத்திறன் சம்பந்தப்பட்ட பிரச்சனை
கிட்ட பார்வை மற்றும் தூரப்பார்வை போன்ற நிலைகள் இருக்கும் பொழுது ஒரு பொருளை பார்ப்பதற்கு கண்கள் கூடுதலாக சிரமப்பட வேண்டி இருக்கும். இந்த கூடுதல் முயற்சியின் விளைவாக தலைவலி ஏற்படலாம்.
தவறான கண்ணாடிகள் அல்லது காண்டாக்ட் லென்ஸ்
தவறான பிரிஸ்கிரிப்ஷன் கொண்ட கண்ணாடிகள் அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிவது கண்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி, தலைவலியை உண்டாக்கும். எனவே வழக்கமான முறையில் கண் செக்-அப் செய்து உங்களுடைய பிரிஸ்கிரிப்ஷன் அப்டேட் ஆக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
டிஜிட்டல் காரணங்கள்
நீண்ட நேரத்திற்கு டிஜிட்டல் ஸ்கிரீன்களை எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் பயன்படுத்துவது தலைவலியை உண்டாக்கும். இதற்கான அறிகுறிகள் வறண்ட கண்கள், மங்கலான பார்வை மற்றும் கழுத்து வலி.
கிளாக்கோமா
இந்த நிலையில் கண்களின் உட்புறத்தில் உள்ள அழுத்தம் அதிகமாகி கண்களைச் சுற்றி தீவிரமான தலைவலி உண்டாகும். இந்த நிலையில் மேலும் குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் உண்டாகும்.
கண் தசைகள் சமநிலை இல்லாமல் இருத்தல்
கண்களில் லேசான சமநிலை இல்லாமல் இருந்தால் கூட அதனால் அழுத்தம் உண்டாகி ஒரு பொருளை பார்ப்பதற்கு கண் தசைகள் கடினமாக வேலை பார்க்க வேண்டி இருக்கும். இதனால் அடிக்கடி தலைவலி ஏற்படலாம்.
எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?
அடிக்கடி உங்களுக்கு தலைவலி ஏற்பட்டாலோ, உங்கள் கண்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தாலோ உடனடியாக கண் நிபுணரை அணுக வேண்டும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
This website uses cookies.