நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் தேடி தேடி செய்வதுண்டு. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அன்றாடம் சாப்பிடுகிறோம். பழங்கள், காய்கறிகள், நட்ஸ், விதைகள், சிறுதானியங்கள், முளைகட்டிய பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறோம். இன்னும் சிலருக்கு இரவில் பால் குடிக்கும் பழக்கம் உண்டு. ஒரு சிலர் பாலில் மஞ்சத்தூள் கலந்து பருகுவார்கள். ஆனால் பாலில் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் பசு நெய் கலந்து குடிப்பது செரிமானத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பாலில் நெய் கலந்து பருகும்பொழுது வயிறு தொடர்பான எந்த பிரச்சனைகளும் நமக்கு நேராது. மலச்சிக்கல் பிரச்சனையினால் தொடர்ந்து அவதிப்பட்டுபவர்கள் பசும்பாலில் பசு நெய்யை சேர்த்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
பாலில் நெய் கலந்து குடிக்கும் போது உடல் வலிமை அதிகரிக்கிறது. இதனை தினமும் குடித்து வரும் பொழுது உங்களால் வழக்கத்தை விட அதிக நேரம் வேலை செய்ய முடியும். தசைகளின் வலிமை அதிகரிக்கிறது. மேலும் எலும்புகள் வலுப்பெறுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாலில் நெய் கலந்து குடிக்கலாம். அதோடு இந்த கலவை நமது குடலுக்கும் அதிக நன்மைகளை சேர்கிறது. வயிற்றில் ஏதேனும் எரிச்சல் இருக்குமாயின் அதனை நீக்க பாலில் நெய் கலந்து பருகலாம்.
மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற பாலில் நெய் கலந்து குடிக்கலாம். இவ்வாறு தினமும் குடுத்து வரும் பொழுது நாளடைவில் மூட்டு வலி இல்லாமல் போகிறது. நெய்யில் காணப்படும் ஒமேகா 3 மற்றும் ஒமேகாசி கொழுப்பு அமிலங்களும் பாலில் உள்ள கால்சியங்களும் சேர்ந்து எலும்புகளை பலப்படுத்துகிறது.
கர்ப்பிணி பெண்கள் தினமும் காலில் நெய் கலந்து குடித்து வர அவர்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இது தாய்க்கு மட்டுமின்றி வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆரோக்கியத்தை சேர்க்கிறது. எனினும் இதனை பருகுவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
தேர்தல் நெருங்கும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் இருப்பார்கள் என்று தெரியும் என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: சென்னையில்…
தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா அஜித் குமார் பாணியில் அறிவித்துள்ளார். சென்னை:…
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
This website uses cookies.