பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் மங்குஸ்தான் பழமானது மிகவும் இனிப்பான மற்றும் ஜூஸியான ஒரு பழமாகும். இது தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்த பழத்தை அப்படியே சாப்பிடலாம். மேலும் ஒரு சில உணவுகளும் இந்த பழத்தைக் கொண்டு செய்யப்படுகிறது. இந்த பதிவில் மங்குஸ்தான் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
மங்குஸ்தான் பழத்தில் ஏராளமான ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. உடலில் உள்ள செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீ ராடிக்கில்களை எதிர்த்து போராடக்கூடிய சான்தோன்ஸ் மங்குஸ்தான் பழத்தில் காணப்படுகிறது.
மங்குஸ்தான் பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் காணப்படுவதால் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் வைட்டமின் சி சத்தானது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தாங்க முடியாத வயிற்று வலியை போக்குவதற்கு மங்குஸ்தான் பழம் பெரிதும் உதவியாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
அதிக ரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? தினமும் ஒரு மங்குஸ்தான் பழம் சாப்பிடுங்கள். மங்குஸ்தான் பழத்தில் காணப்படக்கூடிய பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம் மற்றும் மாங்கனிஸ் போன்றவை ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. அதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது.
மங்குஸ்தான் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதால் இது அனைத்து விதமான செரிமான பிரச்சனைகளையும் குணப்படுத்தும். மலச்சிக்கல் பிரச்சனையால் தொடர்ந்து அவதிப்பட்டு வருபவர்கள் தினமும் ஒரு மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.