பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் மங்குஸ்தான் பழமானது மிகவும் இனிப்பான மற்றும் ஜூஸியான ஒரு பழமாகும். இது தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்த பழத்தை அப்படியே சாப்பிடலாம். மேலும் ஒரு சில உணவுகளும் இந்த பழத்தைக் கொண்டு செய்யப்படுகிறது. இந்த பதிவில் மங்குஸ்தான் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
மங்குஸ்தான் பழத்தில் ஏராளமான ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. உடலில் உள்ள செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீ ராடிக்கில்களை எதிர்த்து போராடக்கூடிய சான்தோன்ஸ் மங்குஸ்தான் பழத்தில் காணப்படுகிறது.
மங்குஸ்தான் பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் காணப்படுவதால் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் வைட்டமின் சி சத்தானது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தாங்க முடியாத வயிற்று வலியை போக்குவதற்கு மங்குஸ்தான் பழம் பெரிதும் உதவியாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
அதிக ரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? தினமும் ஒரு மங்குஸ்தான் பழம் சாப்பிடுங்கள். மங்குஸ்தான் பழத்தில் காணப்படக்கூடிய பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம் மற்றும் மாங்கனிஸ் போன்றவை ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. அதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது.
மங்குஸ்தான் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதால் இது அனைத்து விதமான செரிமான பிரச்சனைகளையும் குணப்படுத்தும். மலச்சிக்கல் பிரச்சனையால் தொடர்ந்து அவதிப்பட்டு வருபவர்கள் தினமும் ஒரு மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.