ஆரோக்கியம்

10 உலர்ந்த திராட்சை இருந்தா போதும்… மலச்சிக்கல் பிரச்சினைக்கு குட்-பை!!!

உலர்ந்த திராட்சைகளை சாப்பிடுவதால் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதே உலர்ந்த திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து குடிப்பதால் அதனுடைய பலன்கள் இன்னும் பன்மடங்காக அதிகரிக்கிறது. காலை எழுந்ததும் இந்த தண்ணீரை நீங்கள் குடித்து வர உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, வளர்சிதை மாற்றம் மேம்படுத்தப்படும். இப்போது திராட்சை தண்ணீரை பருகுவதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

திராட்சை தண்ணீரில் அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன. வைட்டமின்கள் C மற்றும் K முதல் இரும்பு சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் வரை திராட்சை தண்ணீரில் உள்ளதால் இது நம்முடைய உடலுக்கு ஊட்டச்சத்து ஊக்கியாக அமைகிறது. இதனை தினமும் பருகி வந்தீர்களானால் உங்களுடைய உடல் ஆரோக்கியம் மேம்படும்.

திராட்சை தண்ணீர் மலத்தை மென்மையாக்கி மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. திராட்சைகளில் காணப்படும் கரையும் நார்சத்து செரிமானத்தை மேம்படுத்தி இரைப்பை குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.
வழக்கமான முறையில் இதனை நீங்கள் பருகி வந்தால் உங்களுடைய செரிமான அமைப்பு மேம்படும்.

திராட்சை தண்ணீரில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும். மேலும் எல்டிஎல் கொலஸ்ட்ராலின் ஆக்ஸிடேஷனை தவிர்ப்பதன் மூலமாக தமனிகளில் பிளேக் உருவாவதை தவிர்த்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

திராட்சை தண்ணீரில் குறைந்த கிளைசிமிக் எண் இருப்பதால் இது டயாபடீஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் பருகுவதற்கு ஏற்றதாக அமைகிறது. கரையும் நார்ச்சத்து மற்றும் இயற்கை சர்க்கரைகள் அடங்கிய திராட்சை தண்ணீர் நமது உடலில் பொறுமையாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் திடீர் குளுக்கோஸ் அதிகரிப்பு ஏற்படுவதை தவிர்த்து, நிலையான ஆற்றல் அளவுகளை பராமரிக்கிறது.

வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் காணப்படும் இந்த திராட்சைத் தண்ணீர் நமது நோய் எதிர்ப்ப அமைப்பை வலுப்படுத்தி, தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக பாதுகாக்கிறது. வைட்டமின் சி சத்தானது வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்டி ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலையாக்குகிறது.

கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் கே திராட்சை தண்ணீரில் இருப்பதால் இது எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும், ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதை தவிர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் எலும்பு அடர்த்தி மற்றும் வலிமையை அதிகரிக்கிறது.

ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் காணப்படும் திராட்சைத் தண்ணீர் ஆரோக்கியமான சருமம் மற்றும் தலைமுடிக்கு முக்கிய பங்காற்றுகிறது. கொலாஜன் உற்பத்தியை தூண்டி சருமத்தின் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்கிறது. இந்த திராட்சை தண்ணீரை தினமும் பருகி வந்தால் வயதான அறிகுறிகளை போக்கி உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் பளபளப்பையும் மீட்டெடுக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

6 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

8 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

9 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

9 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

10 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

11 hours ago

This website uses cookies.