பால் மற்றும் பிஸ்கட் சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது. ஒரு சில உணவுகளை ஒன்றாக சாப்பிடுவது சுவையை மட்டும் அதிகரிக்காமல், அவற்றின் நன்மைகளையும் பன்மடங்கு அதிகரிக்கும். அந்த மாதிரியான சில உணவு கலவைகள் பற்றி இப்போது பார்ப்போம்.
●கிரீன் டீயுடன் கருப்பு மிளகு
கிரீன் டீயுடன் சிறிது கருப்பு மிளகு சேர்த்துக் கொண்டால், அதன் எடை குறைப்பு மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளை அதிகரிக்கிறது. கருப்பு மிளகில் பைபரின் என்ற கலவை உள்ளது. இது அதன் தனித்துவமான சுவை மற்றும் வாசனைக்கு காரணமாகும். இந்த பொருளானது கிரீன் டீயில் காணப்படும் எபிகல்லோகேடசின்-3-கேலேட் (EGCG) போன்ற ஆக்ஸிஜனேற்றங்களை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது.
●தக்காளியுடன் ப்ரோக்கோலி
லைகோபீன் தவிர, தக்காளியில் வைட்டமின்கள் சி, ஏ, ஈ மற்றும் பி, அத்துடன் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் உள்ளது. ப்ரோக்கோலியில் வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு கலவைகள் நிறைந்துள்ளன. இந்த இரண்டு காய்கறிகளையும் சேர்த்துக் கொண்டால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
●ஆப்பிளுடன் டார்க் சாக்லேட்
ஆப்பிள் மற்றும் டார்க் சாக்லேட் மிகவும் பொதுவான உணவு கலவையாகும். டார்க் சாக்லேட்டுடன் ஆப்பிளை சாப்பிடுவதன் விளைவாக, மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம். டார்க் சாக்லேட்டில் கேடசின்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அவை உங்கள் இதயத்திற்கு நன்மை பயக்கும்.
●பாதாம் மற்றும் கேல்:
மாங்கனீஸ், தாமிரம், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், பி வைட்டமின்கள், அத்துடன் வைட்டமின்கள் சி, ஈ, ஏ மற்றும் கே ஆகியவை முட்டைகோஸ் குடும்பத்தை சேர்ந்த கேலில் ஏராளமாக உள்ளன. கேலுடன் பாதாமை உட்கொள்ளும் போது, பாதாமில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கேலில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சுவதற்கு உதவும்.
●ஆலிவ் எண்ணெய் மற்றும் தக்காளி
தக்காளியில் காணப்படும் லைகோபீன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொழுப்பில் கரையக்கூடியது மற்றும் கொழுப்பை சரியாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதன் விளைவாக, ஆலிவ் எண்ணெயில் காணப்படும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களான ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 போன்றவை, தக்காளியை சேர்த்து சாப்பிடும் போது உடலால் எளிதில் உறிஞ்சப்படும்.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.