வாயு தொல்லை என்பது வலி மிகுந்ததாகவும், அசோகரியத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும், அதோடு மற்றவர்களின் மத்தியில் சங்கடத்தை உண்டாக்கக்கூடிய ஒன்றாகவும் அமைகிறது. எனினும் இதிலிருந்து விடுபடுவதற்கு எளிமையான வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வாயு மற்றும் வயிற்று உப்புசத்திற்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பைத்தியம் புதினா தேநீர் ஆகும். இதில் காணப்படும் மென்தால் செரிமான குழாயில் உள்ள தசைகளை ரிலாக்ஸ் செய்து வாயுக்களை எளிதாக செல்ல அனுமதிக்கிறது. ஒரு கப் புதினா தேநீர் உணவுக்கு பிறகு ஒரு கப் புதினா தேநீர் குடிப்பது வாயுவினால் ஏற்படும் அசௌகரித்தில் இருந்து விடுபட உதவும்.
ஆப்பிள் சைடர் வினிகரில் செரிமான நன்மைகள் உள்ளன. இதில் காணப்படும் நொதிகள் உணவை உடைத்து அதிலிருந்து வெளிவரும் வாயுவை குறைக்க உதவுகிறது. உணவுக்கு முன்பு ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் கலந்த தண்ணீரை குடிப்பது வயிற்று உப்புசம் மற்றும் அசோகரித்தை போக்க உதவும்.
இஞ்சியில் இயற்கையான வீக்க எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் செரிமான குழாயில் உள்ள தசைகளை ஆற்றுவதற்கு இது உதவுகிறது. உணவோடு சேர்த்து ஒரு ஸ்பூன் இஞ்சி சாப்பிடுவது அல்லது ஒரு கப் இஞ்சி தேநீர் குடிப்பது இந்த அசௌகரியங்களில் இருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
சாமந்திப்பூ தேனீர் அமைதியான மற்றும் ஆற்றக்கூடிய விளைவுகளை அளிக்கும். இது செரிமானக் குழாயில் உள்ள தசைகளை ஆற்றுகிறது. இதன் காரணமாக வாயுக்கள் குழாய் வழியாக எளிதில் செல்கிறது. உணவுக்குப் பிறகு ஒரு கப் சாமந்திப்பூ தேநீர் குடிப்பது வாயு உருவாக்கத்தை தடுக்க உதவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.