ஆரோக்கியம்

கூந்தல் வால் மாதிரி ஒல்லியா மாறிடுச்சா… உங்களுக்கான சிறந்த வீட்டு வைத்தியங்கள்!!!

தலைமுடி மெலிந்து போதல் என்பது தற்போது உலக அளவில் பல நபர்கள் சந்தித்து வரும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. தலைமுடி மெலிந்து போவதால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் அவர்களுடைய தலைமுடியின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை அனுபவித்து வருகிறார்கள். மரபணு, ஹார்மோன் சமநிலை இல்லாமல் இருத்தல், மன அழுத்தம் மற்றும் ஒரு சில மருந்துகள் போன்றவை தலைமுடி மெலிந்து போவதற்கு காரணமாக அமையலாம். கூடுதலாக அளவுக்கு அதிகமாக ஹீட் ஸ்டைலிங் சாதனங்களை பயன்படுத்துவது, கெமிக்கல் சிகிச்சைகள் வழங்குவது மற்றும் மோசமான தலைமுடி பராமரிப்பு பழக்கங்கள் ஆகியவையும் தலைமுடி மெலிந்து போக காரணமாகலாம். 

தலைமுடி மெலிந்து போவது ஒரு நபருக்கு தன்னம்பிக்கையை இழக்க செய்து, சுயமரியாதையை குறைக்கிறது. எனவே இந்த பதிவில் தலைமுடி மெலிந்து போவதை தவிர்க்க உதவும் இயற்கையான சில தீர்வுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

உணவு மாற்றங்கள் 

உணவில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது தலைமுடி மெலிந்து போவதை தவிர்ப்பதற்கு உதவும் ஒரு குறிப்பிடத்தக்க வழி. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஜிங்க் மற்றும் பயோடின் ஆகியவை நிறைந்த வஞ்சிரம் மீன், வால்நட் மற்றும் முட்டைகள் போன்றவை தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதே நேரத்தில் வைட்டமின் D மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 

இதையும் படிக்கலாமே: சளி, இருமல் இருக்கும் போது எந்த மாதிரி உணவுகளை சாப்பிட வேண்டும்???

ஹேர் கலர் மற்றும் ப்ளீச்சிங் 

அடிக்கடி ஹேர் கலரிங் மற்றும் ப்ளீச்சிங் செய்யும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதன் காரணமாக தலைமுடி மெலிந்து போகலாம். அளவுக்கு அதிகமாக  கெமிக்கல்களை தலைமுடிக்கு பயன்படுத்துவதால்  மயிர்க்கால்கள் சேதமடைந்து, அதனால் தலைமுடி மெலிந்து போகும். ஆகவே அடிக்கடி ஹேர் கலரிங் மற்றும் ப்ளீச்சிங் செய்வதை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக இயற்கை பொருட்களை பயன்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். இது தலைமுடியை சேதத்தை குறைத்து தலை முடியை ஆரோக்கியமானதாக மாற்றும்.

புளித்த தயிர் 

புளித்த தயிரை தலை முடிக்கு தடவுவது தலைமுடி மெலிந்து போவதை தடுக்கும். புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த தயிரில் மயிர்க்கால்களுக்கு தேவையான போஷாக்குகள். எனவே இது மயிர் கால்களை வலிப்படுத்துகிறது. தயிரில் ஊறவைத்த வெந்தய விதை சாந்தை கலந்து பயன்படுத்துவது இன்னும் பலன்களை அதிகரிக்கும். இது தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து, முடி மெலிந்து போவதை குறைக்கும். இந்த இயற்கை தீர்வுகள் மயிர் கால்களின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கும்.

எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் 

உங்களுடைய மயிர்கால்களை எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். வழக்கமான முறையில் மயிர்க்காய்களுக்கு மசாஜ் செய்யும் பொழுது அது முடி மெலிந்து போவதற்கு முக்கிய காரணமாக அமையும் மன அழுத்தத்தை குறைக்கிறது. இதற்கு நீங்கள் உங்களுடைய விரல் நுனிகளை பயன்படுத்தி தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் தலைமுடி மற்றும் மயிர் கால்களை மசாஜ் செய்யலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

11 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

12 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

13 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

14 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

14 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

15 hours ago

This website uses cookies.