ஆரோக்கியம்

போலியான பன்னீரை இனி வீட்டில் இருந்தபடியே கண்டுபிடிச்சுடலாம்!!!

பாரம்பரிய இந்திய சீஸ் வகையான பன்னீர் குழம்பு வகைகள், இனிப்பு மற்றும் பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் மார்க்கெட்டில் போலியான பன்னீர் விற்பனை செய்யப்படுவதையும், அதனால் உடல்நலத்திற்கு ஏற்படும் கேடுகளும் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் கெட்டுப்போன பன்னீர் விற்பனை செய்யப்படுவது பல்வேறு இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே ஒருவேளை நீங்கள் கடைகளில் பன்னீர் வாங்கி பயன்படுத்துபவர் என்றால் போலியான பன்னீரை வீட்டில் இருந்தபடியே எவ்வாறு கண்டறிவது என்பதற்கான ஒரு சில சோதனைகளை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். 

அயோடின் சோதனை 

பன்னீரை கொதிக்க வைத்து அதில் ஒரு சில துளிகள் அயோடின் சொல்யூஷனை சேர்க்கவும். பன்னீர் நீல நிறமாக மாறினால் நிச்சயமாக அது செயற்கையான பன்னீர். தரமான பன்னீர் அதன் அசல் நிறத்தை தக்க வைத்துக் கொள்ளும். 

பருப்பு சோதனை 

போலியான பன்னீரை கண்டறிய உதவும் மற்றொரு எளிமையான சோதனையில் கொதிக்க வைத்த பன்னீரை தண்ணீரில் குளிர வைத்து அதில் துவரம் பருப்பு சேர்க்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து தண்ணீர் லேசான சிவப்பு நிறமாக மாறினால் அது பன்னீர் கெட்டுப் போனதை குறிக்கிறது. நிறத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத பட்சத்தில் அந்த பன்னீர் தூய்மையானதாக கருதப்படுகிறது. 

அமைப்பு சோதனை 

பொதுவாக பன்னீர் என்பது சாஃப்டாக இருக்க வேண்டுமே அன்றி ரப்பர் போல இருக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல் அளவுக்கு அதிகமாக  மிருதுவாக இருப்பதும் போலியான பன்னீரை குறிக்கிறது. 

அரோமா சோதனை

இயற்கையான பன்னீரில் லேசான பால் வாசனை இருக்கும். இதுவே போலியான பன்னீரில் இந்த பால் வாசனை கட்டாயமாக இருக்காது. அது மட்டுமல்லாமல் அதில் ஒருவித கெமிக்கல் வாசனை வீசும். 

சுவை சோதனை 

உண்மையான பன்னீர் சுத்தமான பால் சுவையை நமக்கு தரக்கூடும். ஆனால் செயற்கையாக தயாரிக்கப்பட்ட பன்னீரில் இந்த சுவையை நம்மால் காண முடியாது. 

ஈரப்பத சோதனை

உண்மையான பன்னீரை அழுத்தும் பொழுது அதிலிருந்து வே வெளியிடப்படும். போலியான பிராடக்டுகளில் இந்த பண்புகள் இருக்காது. 

போலியான பன்னீரை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள்

போலியான பன்னீர் அல்லது செயற்கையாக தயாரிக்கப்பட்ட பன்னீர் வயிறு பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளை உடனடியாக ஏற்படுத்தும். தொடர்ந்து நீண்ட நாட்களாக நீங்கள் செயற்கை பன்னீரை சாப்பிட்டு வருகிறீர்கள் என்றால் அது உங்களுடைய கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும். போலியான பன்னீரில் சேர்க்கப்பட்டுள்ள தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் மற்றும் பால் பவுடர் போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு அபாயத்தை உண்டாக்கும். எனவே போலியான பன்னீர் சாப்பிடுவதை தவிர்ப்பதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள சோதனைகளை செய்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

58 minutes ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

2 hours ago

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

2 hours ago

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

4 hours ago

மகன் தீ விபத்தில் சிக்கியதை அறிந்தும் மக்களை சந்தித்த துணை முதல்வர்.. நெகிழ வைத்த பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…

4 hours ago

This website uses cookies.