ஆரோக்கியம்

மழைக்கு இதமா ஈவ்னிங் டைம்ல கெட்டி சட்னி கூட இந்த சேமியா அடைய சாப்பிட்டு பாருங்க… அட அட அட பிரமாதமா இருக்கும்!!!

எப்பொழுதுமே ஒரே மாதிரியாக காலை உணவை செய்து கொடுத்தால் செய்பவருக்கும் போர் அடித்து விடும், அதனை சாப்பிடுபவருக்கும் அலுத்துப் போய்விடும். எனவே சற்று வித்தியாசமாக அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை கொடுத்தால் சாப்பிடுபவர்கள் ஆசையோடு ஒரு கரண்டி கூடவே சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது சேமியா அடை. இந்த சேமியா அடையை காலை உணவாகவோ அல்லது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாகவோ நீங்கள் செய்து கொடுக்கலாம். இப்போது சேமியா அடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் 

சேமியா – 1 கப்

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – 1 கொத்து

கொத்தமல்லி தழை – சிறிதளவு

கடுகு – 1/4 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு – 6 டேபிள் ஸ்பூன்

துருவிய தேங்காய் – 1/4 கப்

வறுத்த வேர்க்கடலை – 10

இஞ்சி – ஒரு துண்டு

செய்முறை 

ஒரு கப் வறுத்த சேமியாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் வெந்நீர் ஊற்றி 10 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை உங்களிடம் வறுக்காத சேமியா இருந்தால் அதனை ட்ரை ரோஸ்ட் செய்து பயன்படுத்தவும். இதற்கு இடையில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் 1/4 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்க்கவும். 

கடுகு வெடித்தவுடன் 1/2 டேபிள் ஸ்பூன் சீரகம், ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு துண்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து கிளறவும். பிறகு ஒரு சிறிய கேரட்டை துருவி சேர்த்துக் கொள்ளலாம். 

இதையும் படிக்கலாமே: காதுகளுக்கு இயர் டிராப்ஸ் பயன்படுத்துவது சரியா…???

அடுத்து 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த கடலையை ஒன்றும் பாதியுமாக இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தழையை நறுக்கி சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும். சேமியா ஊறியவுடன் தண்ணீரில் இருந்து அதனை வடிகட்டி வேறு ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும். 

பிறகு நாம் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். இப்போது இதில் 6 டேபிள் ஸ்பூன் அளவு கடலை மாவு சேர்த்து கிளறவும். இப்போது கைகளில் எண்ணெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து தோசை கல்லில் அடையாக தட்டி எடுக்க வேண்டியது தான். கைகளில் செய்வதற்கு உங்களுக்கு சிரமமாக இருந்தால் ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி அடையாக தட்டி எடுத்து பிறகு தோசை கல்லில் போட்டு எடுக்கலாம். அடையை வேக வைப்பதற்கு நீங்கள் எண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தலாம். இதற்கு கெட்டி தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

8 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

9 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

10 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

10 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

11 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

11 hours ago

This website uses cookies.